Ads Header

Pages


26 April 2012

தூதுவளை - மூலிகைகள்

கொடி போன்று படரும் தூது வளைக் கீரை கத்தரிச் செடியில் குடும்பத்தைச் சார்ந்த தாகும்.
வேலிகளில் பச்சைப் பசேல் இலையுடன் முட்கம் கலந்து காணப்படும் தூதுவளைக்கு நிறையவே மகிமை.

முட்களை நீக்கிவிட்டு இந்தக் கீரையை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
இதில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் நிறையவே உண்டு. தீராத இருமல், சளித் தொல்லைக்கு தூதுவளை போல் உதவிடும் கீரை எதுவுமில்லை. இதன் இலைகளை முட்கம் நீக்கிவிட்டு ஆய்ந்து நல்லெண்ணையில் வதக்கி வெங்காயமும் உப்பும் சேர்த்து சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
அரிசி மாவுடன் கலந்து அடை செய்தும் சாப்பிடலாம்.

பச்சடி, துவையல், கூட்டு முதலிய பல உணவுகளுடன் தூது வளைக் கீரையை சேர்த்துக் கொம்ளலாம்.
இதேபோல் நெய்யில் வதக்கி துவையல், குழம்பு, கடையல் முதலிய பதார்த்தங்களாகச் செய்து தொட்டுக் கொம்ளும் கூட்டாக பயன்படுத்திக் கொம்ளலாம். நெய்யில் வதக்கி அத்துடன் காய்ந்த மிளகாய் வற்றல், புளி, உப்பு ஆகியவை சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் கூட்டிச் சாப்பிடலாம்.
இக்கீரையை பசுவெண்ணையில் சேர்த்து காய்ச்சி தயாரித்த நெய் காசநோய், மார்புச் சளி ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

ஞாபக சக்திக்கும், அறிவு வளர்ச்சிக்கும் தூதுவளைக் கீரை மிகவும் பயனும்ளதாகும். ஆகவேதான் இதற்கு ஞானக் கீரை என்ற பெயரும் வந்தது.

இக்கீரையை தினமும் சாப்பிட்டு வர சளி, காது மந்தம், காது எழுச்சி, காது குத்தல், உடம்பு எரிச்சல், தேக குடைச்சல், ஆஸ்துமா ஆகியவை குணமாகும். நிமோனியா, டைபாய்டு, கபவாதசுரம், போன்ற நோய்களுக்கும் இது சரியான மருந்து

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner