Ads Header

Pages


30 April 2012

சில அழகு குறிப்புகள் - ஹெல்த் ஸ்பெஷல்!

எனக்கு தெரிந்த சில அழகு குறிப்புகளை சொல்கிறேன். இந்த காலத்திற்கு கெமிக்கல் இல்லாதவற்றை பயன்படுத்த வேண்டும். உடம்பிற்கு கெமிக்கல் ஒத்துக் கொள்ளாமல் நிறைய தோல் சம்மந்தமான வியாதிகள் வருகின்றன. அதற்கு தான் இயற்கையில் நமக்கு கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி நம்மை அழகு படுத்திக் கொள்ள வேண்டும்.

முகத்திற்கு காரட்டை அரைத்து தடவி ஊறிய பின் கழுவினால் முகம் வழவழப்பாக இருக்கும்.

உதடு கருப்பாக உள்ளவர்கள் பீட்ரூட் சாறு எடுத்து தடவி வந்தால் நாளடைவில் சரியாகிவிடும்.

கால் பாதங்களுக்கு பாதம் எண்ணெயை தடவி வந்தால் நாளடைவில் பாதம் வழவழப்பாக இருக்கும்.

கை, கால் முட்டிகள் கருப்பாக இருந்தால் அதற்கு ஆலிவ் ஆயில், பன்னீர் கலந்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

தலைமுடிக்கு முட்டையில் வெள்ளைகரு, மருதாணி கலந்து பூசிக் கொண்டால் தலைமுடி பளபளப்பாகவும், உதிராமலும், நீண்டும் வளரும்.

தலைமுடியில் இளம்நரையிருந்தால் அதற்கு மருதாணி, செம்பருத்தி இலை இரண்டையும் அரைத்து பூசி ஊறிய பின் சீயக்காய் போட்டு கழுவினால் சரியாகிவிடும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner