Ads Header

Pages


30 April 2012

நமது இல்லம் நலமாகட்டும்! - வீட்டுக்குறிப்புக்கள்!

நமது இல்லம்
* நம்முடையதல்லாத எந்தப் பொருளின் மீதும் விருப்பம் கொள்ளக்கூடாது.
* வாரம் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
* வாரம் ஒருநாள் பழங்கள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், மற்றும் சமைக்காத உணவுகளை உண்ணவும்.
* வீட்டில் இறைவனுக்காக பிரத்தியேகமான இடம் அமைக்க வேண்டும். சிந்தனை செய்ய வேண்டும்.
* அதிகாலையில் படுக்கையிலேயே காபி அல்லது தேனீர் அருந்தவேண்டாம். இது நமது உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கக்கூடியது.
* நின்று கொண்டே சமைப்பது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். இடுப்பு வலி, மூட்டு வலி ஆகிய பிரச்னைகள் வருவதற்கு இது காரணமாகும்.
* இதே போன்று டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்பது பற்றியும் யோசனை செய்தல் வேண்டும். தரையின் மீது பத்மாஸனத்தில் அமர்ந்து உணவு உண்பது பற்றியும் யோசனை செய்தல் வேண்டும். தரையின் மீது பத்மாஸனத்தில் அமர்ந்து உணவு உண்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும், நமது உணவு செரிப்பதற்கும் மிகவும் நல்லது. நின்று கொண்டே உணவு உண்பது நல்லதல்ல.
* ஆண்கள் தாங்களாகவே உணவைப் பரிமாறிக் கொண்டு உண்பதை நிறுத்த வேண்டும். மற்றவர்கள் பரிமாறி நாம் உணவு உண்பதில் இருக்கும் ஆனந்தம் நாமே உணவை வைத்துக் கொண்டு உண்பதில் கிடைப்பதில்லை. எதை வேறு வழி இல்லாமல் செய்கிறோமோ அதையே தினசரி வழக்கமாக நாம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது.
* வீட்டுப் பாடத்தைக் குழந்தை தானாகவே செய்ய வேண்டும். குழந்தையின் வீட்டுப்பாடத்தைச் செய்திட. அம்மா முனைந்திடக்கூடாது. அம்மாவிற்கும் குழந்தைக்கும் உள்ள சம்பந்தத்தைக் குலைக்க வேண்டாம். குழந்தை தானாக முன்வந்து தாயாரிடம் கேட்டால், தெரிந்த அளவிற்கு ச் சொல்லிக் கொடுக்கலாம். நான்தான் அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற மனநிலை நல்லதல்ல; தன் முயற்சி செய்ய குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
* வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தால் அது சரியாக, முறையாகப் பயன்படுத்தப் படுகிறதா என்பதில் குடும்பத்தினர் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
* செலவு செய்யும்போது இது அத்தியாவசியமானது தானா என்று யோசித்து செய்ய வேண்டும். அனாவசியமான செலவு யாருக்கும் கௌரவத்தை அளிப்பதில்லை. வீட்டில் மனஸ்தாபம் உருவாகி விடும்.
* குழந்தைகள் வெளி மனிதர்களிடம் பேசும்போது, பழகும் போது, தடுமாற்றம் இருக்கும். இதனை பெரிதுபடுத்தாமல் சரியான முறையில் பழகிட கற்றுத்தர வேண்டும்.
* குழந்தைகள் தினமும் அன்றைய வாரம், மாசம், வருஷம் ஆகியவற்றின் பெயர்களைச் சரியாகச் சொல்வதற்குக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு இருக்க வேண்டும். அதனை நினைவில் கொண்டுள்ளனரா என்பதை அறிய வேண்டும்.
* நமது பண்பாட்டின் வார்த்தைகளை வீட்டில் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
* வீட்டிலுள்ள அனைவருக்கும் சேமிப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு ஆபத்துக் காலங்களில் பயன்படுவதற்காக ஒதுக்கப்பட்டு சேமிக்கப்பட வேண்டும். பண விஷயங்களில் கௌரவமாக நடந்து கொள்ள வேண்டியதைக் குறிப்பாகக் கவனிக்கவும்.
* தூங்கும் முன்பாக இறைவனை பிரார்த்திக்கும் பழக்கம் இருக்க வேண்டும். நாள் முழுவதம் நாம் செய்த செயல்களைப் பற்றி சுத்த சித்தத்துடன் அலசிப் பார்க்கும் பழக்கமும் ஏற்பட வேண்டும்.
*நிறைய மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். பல மொழிகள் கற்ற ஒருவருடைய உலகம், மிகவும் விரிந்து விசாலமாக அடையும். முதலில் பேசுவதற்கும், பிறகு படிப்பது மற்றும் எழுதுவதற்கும் பயில வேண்டும்.
* நமது கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விஷயங்களையும் விரிவான கண்ணோட்டத்தை குழந்தைகளுக்கு அறிந்து கொள்ள பழக்கப்படுத்த வேண்டும்.
* குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே வீட்டு முகவரி, தாய், தந்தையர் பெயர், அவர்கள் செய்யும் வேலை, வீட்டுத் தொலைபேசி எண்கள், தந்தையின் அலுவலகத் தொலைபேசி எண் முதலியன கற்றுத்தந்து நினைவில் நிறுத்த பழக்கப்படுத்த வேண்டும். ஆபத்து அவசியம் ஏற்படும்போது பயன்படுத்த சொல்லித்தர வேண்டும்.
* அறிமுகம் இல்லாத வெளியாரிடம் வீட்டு விஷயத்தையோ, தகவல்களையோ பரிமாறிக் கொள்ளக்கூடாது என்பதையும் குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும்.
* பொது இடத்தில் தனிப்பட்ட விஷயங்களை விவாதிப்பது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது தவிர்க்க குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
* கடிதமெழுதும் பழக்கம் மிகவும் உன்னதமானது. அதனால் கௌரவம் அதிகரிக்கும்.
* வீட்டில் யாராவது நோய்வாப்பட்டால் பயப்படக்கூடாது. ஆபத்துக்கால முதலுதவி சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
* நோயாளிகள் மகிழ்ச்சியடையும்படி, அவர்களுக்குச் சேவை செய்வது, தேவைகளை முழுமையாகக் கவனிப்பது நலன் பேணுவது இவற்றிற்கும் பயிற்சி இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு இளைஞனும் ஆண்டிற்கு ஒன்றிரண்டு முறை இரத்த தானம் செய்ய வேண்டும்.
* இறந்த பின்பு கண்கள் தானம் செய்யப்பட வேண்டும் என்று வீட்டிலுள்ள அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
* இறப்பு தவிர்க்க முடியாதது. இதனைப் புரிந்து கொண்டு மரணத்தைப் பற்றிய பயமில்லாது இருக்க வேண்டும்.
* வீட்டில் அனைவருக்கும் ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் மீது அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ள பண்புப்பதிவை ஏற்படுத்த வேண்டும்.
* பார்த்த பொருட்கள் அனைத்தையும் வாங்குவதும், அதைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதும் மேலைநாட்டு கண்ணோட்டம். நமது வீட்டில் வாங்குவது, வாங்கிய பொருளை முறையாக பயன்படுத்தும் கண்ணோட்டம் ஏற்பட வேண்டும்.
* வீட்டில் நடைபெறும் விழாக்களில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ஆகியவற்றைப் பற்றி விவாதித்து அதன்படி செயல்பட வேண்டி பயிற்றுவிக்கவும்.
* வரதட்சணையைப் பற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே மாதிரியான அபிப்பிராயம் உருவாக்கப்பட வேண்டும்.
* அதே போன்று பரிசுப் பொருட்கள் பற்றியும், இல்லத்தினர் அனைவருக்கும் ஒரே கருத்து நிலவ வேண்டும்.
* குழந்தைகளுக்கு எந்த வயதில் திருமணம் செய்வது நல்லது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
* எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது? தனி நபர், குடும்பம், சமுதாயம் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு இதைப் பற்றி சிந்தனை செய்ய வேண்டும்.
* வீட்டில் பிராணிகள் பராமரிக்கப்பட வேண்டும். நமது வீட்டின் பழக்கத்திற்குத் தகுந்தவாறு, பசு, பூனை....
* கழிவறைகள் நமது நாட்டு வகையிலானதாக இருக்க வேண்டும். கபோடுகள் நோயாளிகளுக்கும் தான் பொருத்தமாக இருக்கும். ஆரோக்கியமான இளைஞர்களுக்கல்ல.
* வருடத்தில் ஒருமுறை குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்ல வேண்டும்.
* தானம் கொடுக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
* கை, கால், வாய் கழுவி விட்டுதான் சாப்பாடு சாப்பிட வேண்டும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner