Ads Header

Pages


26 April 2012

பட்டுப் புடவை.. பராமரிப்பு டிப்ஸ்!

புடவையில் கறை இருந்தால், தண்ணீரில் எலுமிச்சை சாறு விட்டு, கறைபட்ட இடத்தை அதில் முக்கி எடுக்க வேண்டும். புடவையை முறுக்குவதோ, பிழிவதோ கூடாது.
பல முறை புடவையை கட்டி இருந் தால், வெறும் தண்ணீரில் நனைத்து நிழலில் உலர வைக்க வேண்டும்.
புடவையை ஒருமுறை கட்டி அவிழ்த்த பிறகு காற்றோட்டமான பகுதியில் உலர வைத்து பின் மடித்து வைக்க வேண்டும்.
சில மாதங்களுக்கு ஒரு முறை மடிப்பை மாற்றி மடித்து வைக்க வேண்டும்.
பட்டுப் புடவையின் தரத்தை இப்படி அறியலாம்!
புடவையை கறுப்பு நிற சிலேட்டில் தேய்த்தால் வெள்ளியின் நிறத்தில் வெள்ளையாக வந்தால், அது அசல் பட்டு. டூப்ளிகேட் பட்டாக இருந்தால் செம்பு நிறத்தில் வரும்.
பட்டுப் புடவையின் குஞ்சத்தை நெருப்பில் கொளுத்தினால் தீயில் பொசுங்கி, கரியாகி, பூச்சியின் வாடை வந்தால் அது ஒரிஜினல். போலிப் பட்டாக இருந்தால் இத்தகைய வாடை வராது. தவிர, சாம்பலும் திரிதிரியாக நிற்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner