Ads Header

Pages


16 April 2012

ஓட்ஸ் நோன்புக்கஞ்சி (சிம்பிள்) சமையல் குறிப்புகள் !

தேவையான பொருட்கள்
ஒட்ஸ் - 100 கிராம்
பால் - 1 கப
பூண்டு - 2 பல்
சீரகம் - கால்ஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
மல்லி இலை - கொஞ்சம்
மிளகாய் - 1
வெங்காயம் - 1
சூப் கியுப் - 1 (விருப்பப்பட்டால்)
கருவேப்பிலை- 1 இணுக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
ஒட்ஸ்சை மிக்ஸியில் ஒர் சுற்று சுற்றிக்கொள்ளவும்.வெதுவெதுப்பான நீரில் ஒட்ஸ் ஊற வைக்கவும்.வெங்காயம்,தக்காளி ,மல்லி இலை கட் செய்து வைக்கவும்.சீரகம்,வெந்தயம் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து,அதில்பூண்டு,சீரகம் வெந்தயம் ,பாதி வெங்காயம்,தக்காளி,மல்லி இலை,மிளகாய் விருப்பபட்டால் சூப் கியுப் போட்டு நன்கு கொதிக்கவைக்கவும்.
கொதித்தவுடன் ஊறிய ஓட்ஸ்சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளரவும்,2 நிமிடத்தில் ஓட்ஸ் வெந்து விடும்.பால் சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.சூப் கியுப் போட்டால் உப்பு போடத்தேவையில்லை.
கடாயில் எண்ணெய் ,நெய் விட்டு வெங்காயம் வதக்கி கருவேப்பிலை போட்டு தாளித்து ஓட்ஸ் கஞ்சியில் கொட்டவும்.
சுவையான ஓட்ஸ் நோன்புக்கஞ்சி ரெடி.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner