Ads Header

Pages


22 April 2012

பகைவரை நண்பராக்கும் வழி! - நபி மொழிகள்!

பகைவரை நண்பராக்கும் வழி!

இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்' எனச் சொல்லி வணக்கம் சொல்வார்கள். இதன் பொருள், "அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும்' என்பதாகும்.

உலகம் பகை என்ற கட்டடத்தை பலமாக கட்டிக் கொண்டிருக்கிறது. ஒருவரது முன்னேற்றத்தை கண்டு, மற்றொருவருக்கு சகிக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி, பொறாமை அதிகரித்து விட்டது. இதை தவிர்க்க வேண்டும் என்கிறது இஸ்லாம். "அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்வது தான் இதற்கு ஒரே தீர்வாகும்

ஆம்! பகை உணர்வுடன் நடந்து கொள்ளும் ஒருவரை பார்க்கும் போதெல் லாம் ஒருவர், தொடர்ந்து "அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரது மனம் மாறி விடும். அவர் பகையை மனதில் நினைக்காமல், அல்லாஹ்வின் அருளை நமக்காக வேண்டுகிறாரே என்ற எண்ணத்தில், நண்பராகி விடுவார்.

பகைவரையும் நண்பராக்கும் வார்த்தையே "அஸ்ஸலாமு அலைக்கும்'.

நபிகள் நாயகம் இதுபற்றி கூறும் போது, "ஸலாத்தின் மூலம் இம்மை மறுமை நன்மைகளைக் காணலாம். மக்களிடையே அன்பு பரவும். எதிரிகள் தங்கள் பகையை மறந்து இணைவார்கள்,'' என்கிறார்.

ஒருவர் நபிகள்நாயகத்திடம், "இஸ்லாத்தில் சிறந்தது எது ?' என கேட்டார். அதற்கு நாயகம், ""பசித்தவருக்கு உணவளிப்பதும், தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் ஸலாம் சொல்வதும் ஆகும்,'' என்றார்.

நபி ஆதம் (அலை) அவர்களுக்கும், அவர்களது உம்மத்தினர்களுக்கும் அல்லாஹ் இதை கடøமாயாக்கி இருக்கிறான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கு, ஸலாம் சொல்லும் முறையையும் கற்றுக் கொடுத்துள்ளான். இதிலிருந்து ஸலாத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.
உறவுகளை நேசியுங்கள்!

நபிகள் நாயகத்திடம் அவரது தோழர் ஒருவர், ""நாயகமே! எனக்கு உற்றார் உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றேன். அவர்களோ என் உறவை வெட்டி விடுகின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்கள் எனக்கு நேர்மாறானதைச் செய்கிறார்கள். நான் அவர்கள் விஷயத்தில் பொறுமையாக இருக்கிறேன். அவர்கள் அநியாயமாக நடக்கின்றனர்,'' என்றார்.

அதற்கு நாயகம், ""நீர் சொல்வது உண்மையானால், அவர்கள் கேவலம் அடைவார்கள். அவர்கள் உதாசீனப் படுத்தினாலும், எதுவரை நீர் அவர்களிடம் பொறுமை காட்டி, நன்மை செய்து வருவீரோ, அதுவரை அல்லாஹ்வின் உதவி உம்மீது இருந்து கொண்டே இருக்கும்,'' என்றார். உறவினர்களை நேசித்தும் அவர்கள் உதாசீனப்படுத் தினால், அவர்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள் என்பதே இதன் பொருள்.

உதவி என்று வந்து விட்டால்...

ஒருமுறை இமாம் ஹூஸைன் (ரலி) அவர்களிடம் கஷ்டப்படும் ஒருவர் தன் நிலையைக் கூறி உதவி செய்யும்படி வேண்டினார். அப்போது இமாம், பள்ளிவாசலில் இஃதிகாபில் ( இறை தியானம்) இருந்தார். எனவே அவர், "இஃதிகாபில் இருப்பதால் வெளியே வர முடியவில்லை' என்றார். உடனே வந்தவர் அவரது சகோதரர், இமாம் ஹஸன் (ரலி) அவர்களிடம் சென்று உதவி கேட்டார். அவரும் இஃதிகாபில் இருந்தார். ஆனால், இமாம் ஹஸன் உடனே வந்தவருக்கு உதவுவதற்காக கிளம்பி விட்டார். வந்தவருக்கோ சந்தேகம். முன்னவர் இஃதிகாபிலிருந்து எழவில்லை. ஆனால், பின்னவர் வந்து விட்டார். இதற்கான காரணத்தை இமாம் ஹஸனிடமே கேட்டு விட்டார் அவர்.
அதற்கு இமாம் ஹஸன், ""யார் தன் சகோதர முஸ்லிமின் உதவிக்காக வெளியேறி அவருடைய தேவையை நிறைவேற்றி விட்டால், ஒரு ஹஜ்ஜூம், உம்ராவும் (இதுவும் ஒரு புனித யாத்திரை) செய்த நன்மை உண்டு. ஆனால், உதவி கிடைக்காவிட்டால், உம்ரா மட்டுமே செய்த நன்மை உண்டு. எனக்கு ஹஜ், உம்ரா இரண்டின் பயன் கிடைப்பதால் நான் வெளியேறி வந்தேன், '' என்றார்.

""ஒரு முஸ்லிமின் தேவையை நிறைவேற்றுவதற்காக முயற்சி மேற்கொள்வது பத்து வருடங்கள் இஃதிகாப் இருப்பதை விட உயர்வானதாகும்,'' என்கிறார் நபிகள் நாயகம். எந்த நிலையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

உழைத்து சம்பாதியுங்கள்

குடும்பத்தில் கஷ்டம் வந்துவிட்டது. கையில் இருந்த பணமெல்லாம் ஏதோ ஒருவழியில் இழக்கப்பட்டுவிட்டது. இந்த சூழ்நிலையில் சிலர் விரக்தியாகவும் உணர்ச்சி வசப்பட்டும், ""பிச்சை எடுத்தாவது என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்,'' என்று சபதம் செய்வார்கள். இப்படி சபதம் செய்வதை இஸ்லாம் ஏற்கவில்லை.

குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது ஒரு வேலை செய்து சம்பாதியுங்கள் என்கிறது இஸ்லாம். நல் வழியில் சேரும் பணம் குறைவாக இருந்தாலும், இருப்பதற்குள் வாழ்க்கையை நடத்துங்கள். ஏதோ ஒரு காரணத்தால் செல்வம் அனைத்தையும் இழந்தாலும் கூட, அடுத்து என்ன செய்வது என உடனடியாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

கூலி வேலை செய்தேனும் குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எந்த சூழ்நிலையிலும், பிச்சை எடுத்து மட்டும் பணம் ஈட்டக்கூடாது. நபிகள் நாயகம் மக்களிடம், ""குடும்பத்தினரைக் காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்து பொருள் சம்பாதிப் பவர் ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்,'' என்கிறார்.

இனி "பிச்சை எடுத்தாவது குடும்பத்தைக் காப்பாற்றுவேன்' என்ற சொற்களையே மறந்து விடுங்கள். அதற்கு பதிலாக, ""எப்பாடுபட்டேனும் உழைத்து என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்,'' என சொல்லுங்கள். உழைப்பை தான் இஸ்லாம் ஆதரிக்கிறது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner