Ads Header

Pages


02 May 2012

கறிவேப்பிலை அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றது.



உணவுவகைகளில் ருசிக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் இலையாகத்தான் கறி வேப்பிலையை பலரும் கருதுகிறார்கள். கறிவேப்பிலை அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றது.


* பச்சை மஞ்சளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் காலில் தேய்த்தால், குதிகால் வெடிப்பு சரியாகும். மட்டுமின்றி பாதத்திற்கு அழகும் கிடைக்கும்.

* தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலையை கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தால், முடி நன்றாக வளரும். கறுப்பு நிறமும் முடிக்கு கிடைக்கும்.

* கறிவேப்பிலையை, எலுமிச்சை சாறில் அரைத்து அரை மணிநேரம் கழித்து குளியுங்கள். அவ்வாறு செய்தால் பேன், பொடுகு, ஈறு போன்றவை நீங்கும்.

* கறிவேப்பிலை, கற்றாழை, மருதாணி போன்றவைகளை சேர்த்து எண்ணையில் காய்ச்சி தலையில் தேய்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் முடி உதிர்வது தடுக்கப்படும்.

* தினமும் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலை சேர்த்தால், கண்களின் பார்வை சக்திக்கு நல்லது. கறிவேப்பிலையும் ஒருவகை கீரைதான். அதில் வைட்டமின்- ஏ, இருக்கிறது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்து சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.

* ஜீரணத்திற்கும், வயிற்று நலனுக்கும் கறிவேப்பிலை ஏற்றது.

* கறிவேப்பிலைக்கு சரும நோய்களை போக்கும் சக்தி இருக்கிறது. கறிவேப்பிலையை அரைத்து சருமத்தில் பூசி வரவேண்டும்.

* கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி குடித்தால், வயிற்றுக்கு இதமாக இருக்கும்.

* கறிவேப்பிலையை சிறிதளவு அரைத்து, வெறும் வயிற்றில் சுடுநீரை பயன்படுத்தி விழுங்கிவந்தால், உடலில் இருக்கும் கொழுப்பு குறைய வாய்ப்புண்டு.

* இறைச்சி சாப்பிட்டுவிட்டு ஜீரணத் தொல்லை ஏற்படுகிறவர்கள் இஞ்சி, கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து, மோரில் கலக்கி குடிக்கவேண்டும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner