Ads Header

Pages


21 May 2012

இஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? மருத்துவ டிப்ஸ்

ஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இஞ்சி இடுப்பழகிகள் என்றெல்லாம் சொல்கிறார்களே அது ஏன்?

சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறார் மூலிகைமணி

‘‘காலையில் தோல் சீவிய இஞ்சியை நசுக்கி ஒரு குவளைத் தண்ணீரில் போட்டு இரண்டு ஏலக்காயும் சேர்த்து நன்றாகக் காய்ச்சி, பின் வடிகட்டி. சிறிது பாலும் தேனும் கலந்து பருகவேண்டும். மதியம் ஒரு ஸ்பூன் உலர்ந்த இஞ்சித் துண்டுடன் இரண்டு பிடி சாதம், கொஞ்சம் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும்.

மாலையில் கடுக்காய்ப் பொடி அரை ஸ்பூன் பாலுடன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி நாற்பது வயதுக்குமேல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டால் 100 வயதிலும் ராஜநடை போடலாம். நம்ப முடியவில்லையா? இப்படியே ஒருவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்த மருத்துவ வல்லுனர் தேரையர்தான் அவர். மூப்பின் அடையாளம் கொஞ்சமும் தெரியாமல் கடைசிவரை வாழ்ந்திருக்கிறார்.

இன்றைய வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமில்லை என்று நீங்கள் நினைத்தால், பெண்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ்: தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் சிம்ரன், த்ரிஷா, ஸ்ரேயா மாதிரி நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.’’

எது வசதியோ அதைச் செய்து என்றும் இளமையாக இருங்கள். காசு, பணத்தைக் காப்பாற்றாவிட்டால்கூட கடைசி காலத்தில் பெரிதாக வருத்தப்பட வேண்டியிருக்காது. ஆனால் இளமையைத் தவறவிட்டால் அதை ஈடு செய்யவே முடியாது.

1 comments:

Jayadev Das said...

\\ உலர்ந்த இஞ்சித் துண்டு.. \\ இதை சுக்கு என்று சொல்வார்களே??

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner