Ads Header

Pages


03 August 2012

தலை வலி தீர... - பாட்டி வைத்தியம்

லைவலி
தலைபாரம் குறையும்.
துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.
------------------------------------------------------------------------------
கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.
---------------------------------------------------------
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
---------------------------------------------------------
தலை வலி...குறைய:
ஒற்றை தலைவலி...குறைய
துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.
----------------------------------------------------
தலைசுற்றல் குறைய
நெல்லி வற்றல், பச்சைபயறு இரண்டையும் 200 கிராம் அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க தலைசுற்றல் குறையும்.
--------------------------------------------------------------
இஞ்சி சாறு, தேன் கலந்து தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.
---------------------------------------------------------------
ஏலக்காய்களை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
----------------------------------------------------------------
தலைவலி தீர
கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.
--------------------------------------------------------------------
திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.
---------------------------------------------------------------------
முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.
---------------------------------------------------------------------
கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலி குறையும்.
-----------------------------------------------------------------------
எலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
-----------------------------------------------------------------------
கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.
-------------------------------------------------------------------------
இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும்.
---------------------------------------------------------------------------
ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
-------------------------------------------------------------------------------
அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.
---------------------------------------------------------------------------------
மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.
-----------------------------------------------------------------------------
இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.
-------------------------------------------------------------------------------
வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.
-----------------------------------------------------------------------------
வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.
-------------------------------------------------------------------------------
சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.
-----------------------------------------------------------------------------------
மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.
----------------------------------------------------------------------------------
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.
---------------------------------------------------------------------------------
அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.
-------------------------------------------------------------------------
எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .
-------------------------------------------------------------------------------
குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
-------------------------------------------------------------------------------
நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.
----------------------------------------------------------------------------
இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க
தலைவலி குணமாகும்.
------------------------------------------------------------------------------
ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.
------------------------------------------------------------------------------
ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.
--------------------------------------------------------------------------------
மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .
------------------------------------------------------------------------------
உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.
------------------------------------------------------------------------------
தீராத ஒற்றைத் தலைவலி.
விடாத தலைவலி.
எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------
தீராத தலைவலி.
பயணத்தின் போது தலைவலி.
வேலையின் போது தலைவலி.
சிந்தனையின் போது தலைவலி.

குப்பைமேனி இலை மற்றும் பூ - 1 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தடவவும்.
---------------------------------------------------------------------------------
சளித் தொல்லை
ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.
---------------------------------------------------------------------------
புத்துணர்ச்சி பெற‌
ஒரு கையளவு துளசி இலைகளை ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை பருகவும்.

1 comments:

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பயனுள்ள தகவல்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner