Ads Header

Pages


01 August 2012

மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை!

மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை!


கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி 1 நாளைக்கு ரெண்டு வேளைன்னு 10 நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வா..
மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும்.

அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வா.. அப்புறம் மூலம் உன் பக்கமே திருப்பிப்பாக்காம ஓடிப்போயிடும்..
----------------------------------------------------
மலம் வெளியேறும்போது எரிச்சலோட ரத்தம் வெளியாவுது.. மலம் சரியா போகமாட்டேங்குது.. மலத்துவாரத்துல புண் மாதிரி இருக்கு.. அதுனாலதான் உக்கார முடியல.. உக்கார மட்டுமா.. எதுவுமே முடியலை.. அதுக்கு ஒரு மருந்து சொல்லுவீங்கன்னுதான் உங்கக்கிட்டே வந்திருக்கேன்..
வைத்தியருக்கு சாமியின் அவஸ்தையும், வேதனையும் இப்போது நன்றாகவே புரிந்தது.

இந்த மூலம் ஏன் வருது தெரியுமா..

ராவுல அளவுக்கு அதிகமாக கடினமான உணவ கண்ணா பின்னான்னு சாப்பிடுறது.. கண்டமேனிக்கு தண்ணியடிக்கிறது.. அதுக்கு சைடுக்கு எண்ணெயில பொரிச்ச பண்டங்கள காரசாரமா சேத்துக்குறது..

அதும் வெயில் காலத்துல இப்படியெல்லாம் உள்ள போச்சின்னா.. அது வேகத்த இப்படித்தான் காட்டும்..

சாப்பிட்ட உணவு சரியா செரிக்காம.. வயிறு மந்தமாகி மலச்சிக்கல் உண்டாகி, மலத்த வெளியேத்த முடியாம வாயு சீற்றமாகி ஆசன வாயில வீக்கத்தையும் புண்ணையும் உண்டாக்குது.. அது காலப்போக்குல பல தொந்தரவுகள கொடுக்க ஆரம்பிக்குது... அளவான உணவும், மிதமான சுவையும் எப்போது உடம்புக்கு தீங்கு செய்யாது.. ஹம்ம்ம்.. அதத்தான் யாரும் இப்ப கடைப்பிடிக்கிறதில்லையே..

சரி... இனிமேலாவது நாக்கு ருசிக்காக இப்படி கண்ட பொருளையும் வாங்கி சாப்பிடாத.. இப்ப சொல்றத கேட்டுக்க..

1 comments:

Tamilthotil said...

அருமையான தகவல் நண்பரே....

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner