Ads Header

Pages


10 September 2012

மருந்தாகப் பயன்படும் உணவுப் பொருட்கள்.

னைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருக்கின்றது.
தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும்.
அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும்.
கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும்.
சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும்.
புதினா சாப்பிட்டால் பசியைத் தூண்டும்.
கீழாநெல்லியை சாப்பிட்டால் மஞ்சள்காமாலை நோய் மறையும்.
கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன.

பசும்பால் தாதுக்கள் ஆண்மையை அதிகரிக்கும்.
எருமைப் பால் புத்தியை மந்தம் அடையச் செய்யும்.
ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும்.
மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.
வெண்ணை ஆண்மையை பெருக்கும்.
நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும்.
கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும்.
தேன் கண்களுக்கு நல்லது.
நல்லெண்ணை குளிர்த்தன்மை உடையது.

நீர் மனிதனுக்கு இன்றியமையாதது.
கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது.
குழந்தைகள், வாத நோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது.
அவல் பலத்தை அதிகரிக்கும்.
கோதுமை ஆண்மையைப் பெருக்கும்.
வெந்தயம் கசப்புச் சுவை உடையது. சீதக்காய்ச்சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவைத் தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையைப் பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும்.
அதேபோல் ஜவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது.
பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது.
வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும்.
பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியைத் தந்து, ஆண்மையைப் பெருக்கும்.
பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும்.
பெருங்காயம் தேக வாயுவைக் குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது.
மஞ்சள் ரத்தத்தை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும்.
மிளகு இருமல், சளியைக் குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும்.
இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும்.
கத்தரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது.
கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும்.
மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.
தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி தேங்காய்க்கு உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது.
வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner