Ads Header

Pages


31 July 2012

எளிய பாட்டி வைத்தியம் ! மூலிகைகீரைகள்!

ளிய பாட்டி வைத்தியம் !

முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, இரத்த மூலம் போன்றவை சரியாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும்.

அகத்திக்கீரை சாற்றில் 5 கடுக்காய்களை உடைத்துப்போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச்சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாக குணமாகும்.

வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம், பௌத்திரக் கட்டி போன்றவை குணமாகும்.

முடக்கத்தான் கீரையுடன் 2 கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.


கானாம்வாழைக் கீரையையும் துத்தி இலையையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும்.

துத்திக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டினால், மூல நோயில் உண்டாகும் பௌத்திரக் கட்டி குணமாகும்.

புளியாரைக் கீரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும்.

சுக்காங் கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் மூல நோய்கள், குடற்புண்கள் குணமாகும்.

சுக்காங் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே தீரும்.

பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பருப்பை அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே குணமாகும்.

பாற்சொரிக் கீரைச், துத்திக்கீரை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.

பாற்சொரிக் கீரைச் சாறில் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும்.
*
1. ருசியின்மை

முளைக்கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ருசியின்மைக் குறையாடு நீங்கும்.

புளிச்சக்கீரை சாற்றில் சோம்பை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ருசியின்மை பிரச்னை தீரும்.
*
2. வயிற்றுக்கடுப்பு

பொடுதலைக் கீரையுடன் சிறிது ஓமம், சுண்டை வற்றல், மாதுளைத்தோல், மாம்பருப்பு, ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், சீதக்கழிச்சன், பேதி, வயிற்றுக் கடுப்பு போன்றவை தீரும்.

புளியாரைக் கீரைச் சாறு எடுத்து, அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்துச் சாப்பிட்டால் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.
*
3. வயிற்றுப் புண்

ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

முள்ளங்கிக் கீரையை வெந்தயம் ஊற வைத்த நீரில் அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும்.

4. வயிற்றுப் புழுக்கள்

பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.

5. வயிற்றுப் பூச்சி

வல்லாரைச் சாறில் வாய்விளங்கத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவில் 5 கிராம் அளவு சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சி, கீரிப்பூச்சி, நாக்குப்பூச்சி போன்றவை மடியும்.

6. வயிற்றுப் பொருமல்

சதகுப்பைக் கீரையுடன் சோம்பை அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் சரியாகும்.

7. வயிற்று வலி

புளியாரைக் கீரையைச் சாறு எடுத்து, அதில் உப்பு சேர்த்துக் காய்ச்சவும். மீண்டும் மீண்டும் காய்ச்சுவதால் பாத்திரத்தில் படியும் உப்புப் படிவத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். இதைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, 2 சிட்டிகையை எலுமிச்சைச் சாறில் கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட வயிற்று வலியும் உடனே மறையும். குடற்புண்களும் மாயமாக மறையும்.

சுக்காங் கீரைச் சாறில் சிறிது பெருங்காயம், சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்தால் வயிற்று வலி உடனே மறையும்.

8. வயிறு வீக்கம்

முள்ளிக் கீரையை சாறு எடுத்து, அதில் உலர்ந்த நெல்லிக்காயை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கித் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் வயிறு வீக்கம், தொப்பை மறையும்.

9. வலிப்பு

அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.

10. வாதநோய்

மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாதநோய்கள் தீரும்.

முடக்கத்தான் கீரைச் சாறில், சுக்கு, மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றைச் சம அளவு போட்டு ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள், பக்கவாதம், முடக்குவாதம், இடுப்புவலி, முதுகுத்தண்டு வலி போன்றவை குணமாகும்.

நல்வேளைக் கீரை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் தீரும்.

அம்மான் பச்சரிசி கீரையை அரைத்து தினமும் எலுமிச்சை அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் குணமாகும்.

நச்சுக்கொட்டைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள், வாத வலிகள் தீரும்.

11. வாந்தி

பசலைக் கீரைச் சாறில் மயில் இறகின் சுட்ட சாம்பலை குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

புதினா இலைச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து சாப்பிட்டால், வாந்தி சுவையின்மை, ருசியின்மை போன்ற பிரச்னைகள் குணமாகும்.

முசுமுசுக்கைக் கீரைச் சாறில் உலர்ந்த திராட்சையை அரைத்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

12. வாயுக்கோளாறு

முருங்கைக்கீரையைப் பூண்டு, உப்பு, மஞ்சள் சேர்த்து அவித்து தினமும் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் சரியாகும்.

கறிவேப்பிலையை உலர்த்தி கால் கிலோ அளவு எடுத்துப் பொடியாக்கி, அதில் 25 கிராம் பெருங்காயத்தூள் சேர்த்து தினமும் உணவுக்குப் பிறகு 2 கிராம் அளவு சாப்பிட்டால் வாயுக்கோளாறுகள் நீங்கும்.

வெந்தயக் கீரையுடன் சிறிது ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை (காய்ந்தது), இலந்தை இலை (காய்ந்தது) ஓமம் (சிறிது) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாக்கி சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் தீரும்.

நல்வேளைக் கீரையை (கால் கிலோ) உலர்த்தி, வாய்விளங்கம், ஓமம், மிளகு ஆகியவற்றைத் தலா 50 கிராம் சேர்த்து பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் வாயுக்கோளாறுகள் அனைத்தும் விலகும்.

வாதநாராயணன் கீரையை பூண்டு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் வாயுப் பிரச்னைகள், வயிற்றுப் பொருமல் போன்றவை தீரும்.

சுக்காங் கீரையுடன் சிறிது ஓமம், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாயுக்கோளாறுகள் குணமாகும்.

முள்ளிக்கீரையுடன் பூண்டு, சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு போன்றவை மறையும்.

13. வாய்ப்புண்

நெல்லி இலைகளை அவித்த நீரினால் அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்கள் ஆறிவிடும்.

வாய்ப்புண் ஏற்பட்டால் மணத்தக்காளியைப் பச்சையாக தயிரில் போட்டுச் சாப்பிடுவது பலன் தரும். வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுக்கு முன் சாப்பிடுவதும் குணம் தரும்.

கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.

பொன்னாங்கண்ணி இலைச்சாறு (100 மிலி), கரிசலாங்கண்ணிச் சாறு (100 மிலி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். அதில் 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து கலந்துகொள்ளவும். அடுத்து அதை மெழுகு பதமாகக் காய்ச்சி இறக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், வாய்ப்புண் வயிற்றுப்புண் போன்றவை குணமாகும்.

அகத்திக்கீரை சாற்றில் (200 மிலி) 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து அரைத்து, அத்துடன் நல்லெண்ணெய் (250 மிலி) சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து தைல பதத்தில் இறக்கவும். இதைத் தினமும் அதிகாலையில் 5 மிலி (1 ஸ்பூன்) அளவுக்குச் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் குணமாகும். உதடு வெடிப்புக்கும் நிவாரணம் கிடைக்கும்.

கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் (30 மிலி) நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், டான்சில், சைனஸ் போன்றவை குணமாகும்.

புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் விய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

14. விந்து கழிதல் நீங்க

அம்மான் பச்சரிசி கீரையுடன் கிழா நெல்லி இலையையும் சம அளவு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலக்கி காலை, மாலை இரு வேளை என தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் குறைபாடு சரியாகும்.

15. விஷக்கடி

சிறுகீரை வேர், குப்பைமேனி வேர், சிறுபீளை வேர் மூன்றையும் சம அளவில் எடுத்து, அலசி நன்றாக அரைத்து, எலுமிச்சம் பழம் அளவு அதிகாலையில் சாப்பிட்டு உணவில் உப்பு சேர்க்காமல் பத்தியம் இருந்தால், வண்டுக்கடி, தேள்கடி போன்ற அனைத்து விதமான விஷக்கடிகளும் குணமாகும்.

16. வீக்கம்

காசினிக் கீரையுடன் சிறிது பார்லி, மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் உடலில் நீர் கோர்த்துக் கொண்டதால் ஏற்படும் வீக்கம் மறையும்.

கொடிப்பசலைக் கீரையை விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கிக் கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை கரையும்.

முள்ளிக்கீரையை அரைத்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது பற்றுப்போட்டால் அவை கரைந்துபோகும்.

16. வெண்குஷ்டம்

அம்மான் பச்சரிசி, கீழா நெல்லி, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து, 6 மாதங்களுக்கு தினமும் காலை மாலை இரு வேளையும் 15 கிராம் அளவு சாப்பிட்டால் வெண்குஷ்டம் குணமாகும்.

17. வெள்ளைப்படுதல்

பொன்னாங்கண்ணி கீரைச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பசு நெய், பசும்பால் என ஒவ்வொன்றிலும் தலா 60 மிலி அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கி காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளை ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவுக்குச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல், கை கால் எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புக்கள் குணமாகும்.

பசலைக் கீரைச் சாறு, யானை நெருஞ்சில் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தினமும் காலை மாலை இரு வேளையும் சுமார் 60 மி.லி. அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும். ஆண்களுக்கு உண்டாகும் இந்திரீய ஒழுக்கும் குணமாகும்.

பொடுதலைக் கீரையுடன் சம அளவு வெள்ளெருக்கு சேர்த்து அரைத்து மூன்று சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அதிகாலையில் வெறு வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை நிரந்தரமாகத் தீரும்.

துத்திக்கீரை, கடுக்காய் (1) இரண்டையும் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பாலக் கீரை, சீரகம், பூண்டு ஆகியவற்றை அரைத்து 3 கிராம் அளவில் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை சரியாகும்.

பிண்ணாக்குக் கீரையைச் சாறு எடுத்து, அதில் கடுக்காய்த் தோலை ஊறப்போட்டு, பிறகு காய வைத்து எடுத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.

முக்குளிக் கீரைச் சாறில் தான்றிக்காய் தோலை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.

18. வெள்ளை ஒழுக்கு

சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களது அந்தரக்க உறுப்புக்களில் இருந்து வெள்ளை நீர் ஒழுக்கு இருக்கும். இதனால் அரிப்பு, எரிச்சல், புண் போன்றவை உண்டாகி வேதனைப்படுத்தும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள், புளியாரைக் கீரையை 15 நாட்களுக்கு (காலையில் மட்டும்) சமைத்துச் சாப்பிட்டால் வெள்ளை ஒழுக்கு பிரச்னை தீரும்.

19. ஜீரண சக்தி

புளியாரைக் கீரைச் சாறில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

20. ஜீரண மண்டல உறுப்புக்கள்

பண்ணைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ஜீரண மண்டல உறுப்புக்கள் பலம் பெறும்.

2 comments:

ரவி சேவியர் said...

thank you for paatti vaithiyam

Marzook Mansoor said...

இந்த தகவல்கள் அனைத்தையும்
ஒன்றுவிடாமல் FOLLOW பண்ணுகின்றேன்
மிகவும் பிரயோசனமாக இருகின்றது
வாழ்க உங்கள் சேவை

நன்றி
தோப்பூர் - பஸ்மினா மர்சூக்
அபுதாபி
12 .08 .2012

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner