Ads Header

Pages


31 July 2012

வீட்டுக்குறிப்புக்கள்...டிப்ஸ்... டிப்ஸ்...

டிப்ஸ்... டிப்ஸ்...

பருப்பு ஊறப் போடாமலே, திடீர் வடை செய்ய ஒரு அசத்தல் ஐடியா!

ஒரு ஆழாக்கு பொட்டுக் கடலையை மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி அரைக்கவும். அத்துடன் அரை ஆழாக்கு வறுத்த நிலக்கடலையைச் சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் உப்பு, காரப் பொடி, தண்ணீர் சேர்த்து பிசைந்து வடை தட்டினால், குறைந்த நேரத்தில் சுவையான மொறுமொறுவென்று வாயில் கரையும் வடைகள் தயார்!
-----------------------------------------------------------------
தோசை மிளகாய்ப்பொடி, ஊறுகாய்க்கான மிளகாய்ப்பொடி ஆகியவற்றுக்கு காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைக்கும்போது சரியாக அரைபடாது. முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். பிறகு அதனுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து அரைக்கலாம்.
------------------------------------------------------------------------------
பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ் கலந்து பஜ்ஜி சுட்டால், சுவையும் கலரும் வித்தியாசமாக இருக்கும். மசாலா மணத்துடன் கட்லெட் போன்ற ருசியுடன் இருப்பதால், தக்காளி சாஸையே தொட்டுக் கொள்ளவும் செய்யலாம்.
-----------------------------------------------------------------------------
பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கும்போது, குழைந்து விடாமல் பருப்பு இதழ் இதழாக இருக்க ஒரு சூப்பர் யோசனை!

மூடியுள்ள ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மூடியால் மூடி, குக்கரில் வேக வைத்தால்... பருப்பு அட்டகாசமாக வெந்திருக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner