Ads Header

Pages


09 July 2012

வேப்பிலை இஞ்சிசாறு - மருத்துவ டிப்ஸ்

வேப்பிலை இஞ்சிசாறு

குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதாலும். மண்ணில் கீழே கையை வைத்து விளையாடிவிட்டு அதே கையை வாயில் வைப்பதாலும் வயிற்றில் பூச்சிகள் இருக்கும், பூச்சி இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது, முகத்தில் ஆங்காங்கே தேமல் இருந்தால், சாப்பாடு சரியாக உட்கொள்ளமல் இருந்தால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும். அதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிடம் காண்பித்து கொடுப்பது நல்லது, இதே இயற்கை உணவு முறையிலும் நாம் வெளியேற்றலாம், குழந்தைகள் என்றில்லை பெரியவர்களும் எல்லாருக்குமே இந்த மருந்து மிகவும் உகந்தது.

இஞ்சி - 100 கிராம்
வேப்பிலை - ஆய்ந்து கழுவியது கைக்கு ஒரு கைப்பிடி
தேன் - தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - சிறிது

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேப்பிலையை சுத்தம் செய்து அலசி வைக்கவும்.

சுத்தம் செய்த வேப்பிலை, இஞ்சியுடன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்து டீ வடிகட்டியில் பிழிந்து வடிகட்டவும்.

வடித்த ஜூஸை அப்படியே 15 நிமிடம் வைக்கவும். அடியில் நஞ்சு தங்கி இருக்கும். தெளிந்த சாறை மட்டும் மேலோடு எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.

மற்றொரு வகை: இஞ்சி சாறு தனியாக நஞ்சை தெளிய வைத்து எடுக்கவும்

வேப்பிலையை ஆறிய வெந்நீர் ஊற்றி அரைத்து சாறு பிழியவும்.

இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு, சர்க்கரை, தேன் கலந்து குடிக்கவும். தேன் அதிகமாக கலக்கவும், கசப்பு தெரியாது.

ஆறு மாதம் முதல் 9 மாத குழந்தைகளுக்கு அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைப்பட்டால்
படத்தில் காட்டியுள்ள சங்கில் அரை சங்கு ஊற்றலாம். 9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு சங்கு முழுவதும் கொடுக்கலாம். அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் 2 , 3 சங்கு (அ) கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொள்ளவும். இப்படி சாறு எடுக்க முடியாதவர்கள் வேப்பிலையை பொடித்து வைத்து சுக்குதூள் கிடைக்குது அதையும் வாங்கி கலந்து தேன் கலந்து குடிக்கலாம் ஆறுமாதம் என்றில்லை அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.அதே போல் பூப்பெய்திய பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து. அபார்ஷன் ஆகி கட்டி தங்கி விட்டால் கூட இதை இரண்டு மூன்று முறை குடித்தால் வயிற்றில் மீதி தங்கிய அழுக்குகளும் வெளியாகிடும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டாம். கர்ப்பம் தரிக்கும் முன் (அ) குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner