Ads Header

Pages


31 July 2012

வீட்டுக்குறிப்புக்கள்...டிப்ஸ்!

ஷாஷேக்களில் வரும் ஷாம்பு, உபயோகிக்க முடியாத அளவு கொஞ்சூண்டு மீதம் இருந்தால், அதில் சிறிது தண்ணீர் விட்டு நுரை வரும்படி நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையால், வாரம் ஒருமுறை நாம் பயன்படுத்தும் சீப்புகளை நன்கு சுத்தம் செய்து, நல்ல தண்ணீரில் சுத்தமாக அலசினால் சீப்புகள் பளபளவென்று புத்தம்புதிதாக மின்னும்.

தேங்காய் சட்னியில் காரம் அதிகமாகிவிட்டதா? அதில் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்துவிடுங்கள். காரம் குறையும். சுவையும் அதிகரிக்கும்.

பக்கோடாவுக்கு மாவு பிசறும்போது கொஞ்சம் பிரெட் தூளையும் கலந்தால் பக்கோடா மொறு மொறுவென சூப்பராக இருக்கும்.

நெய் ரொம்ப நாளுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமா? அதில், கொஞ்சம் வெல்லத்துண்டைப் போட்டு வையுங்கள்.

காபித்தூள் வைக்கிற டப்பாவில் நான்கு அல்லது ஐந்து அரிசி போட்டு வைத்தால் அது கட்டியாகாது.

குக்கரின் உள்பாகம் கறை படிந்திருக்கிறதா? உள்ளே ஒரு நியூஸ் பேப்பரைப் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வையுங்கள். காலையில் கழுவ, பளிச்சிடும் குக்கர்!

கறை படிந்த கண்ணாடி கதவுகளைத் துடைக்கப் போகிறீர்களா? ஒரு நிமிஷம்... வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு சொட்டு நீலம் போட்டு, பிறகு துடையுங்கள். இப்போது பாருங்கள்... பளிங்காக பளீரிடுகிறதா கண்ணாடி?

|கத்தி துருப்பிடித்துள்ளதா? அந்தப் பகுதியை ஒரு சிறிய வெங்காயத் துண்டில் அழுத்தித் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து நன்றாகத் துடையுங்கள். துரு ஓடிப்போய்விடும்.

என்ன செய்தும் ஃபிளாஸ்க்கில் வருகிற துர்நாற்றத்தைப் போக்க முடியவில்லையே என்கிறவர்கள், வெந்நீருடன் தயிரைக் கலந்து கழுவுங்கள். வாடை நீங்கி, வசீகரிக்கும் ஃபிளாஸ்க்.

டாய்லெட்டில் கொசு மண்டுகிறதா? கொஞ்சம் மண்ணெண்ணையைத் தெளித்துவிடுங்கள். ஒரு கொசுவும் உள்ளே நுழையாது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner