தினமும்
இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலில 4
பேரீச்சம் பழத்தை ஊற வைத்து 1 மணி நேரம் கழித்து உண்டு வந்தால் உடல்
நல்ல பலம் பெறும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் மாறும்.
கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் படி படியாக
குறையும்.
பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். கண் பார்வைக் கோளாறுகளும் நீங்கும். குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலையும் மாலையும் கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
பொதுவாக
பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவைபடுகிறது.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய
சத்துக்கள் மிகவும் குறைகிறது.இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத
விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் சிறந்த மருந்தாக உள்ளது.
மெனோபாஸ்
காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள்
மிகவும் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலிகள்
உண்டாகும்.
0 comments:
Post a Comment