Ads Header

Pages


09 June 2012

சமையலறையில் பாத்திரங்கள் பளபளக்க... டிப்ஸ்!

டிப்ஸ்! சமையலறையில் பாத்திரங்கள் பளபளக்க...

Tips for a Sleek & Shiny Kitchen - Tips for Women

உங்கள் வீட்டில் வெள்ளை அடித்தாலோ அல்லது பெயிண்ட் அடித்தாலோ ஒரு வாரத்துக்கு அந்த வாசம் போகாது. அந்த அறைகளில் நறுக்கிய வெங்காய துண்டுகளை போட்டு வையுங்கள். பெரும்பாலும் அறைகளின் கதவை மூடி வைத்திருந்தால் ஒரே நாளில் பெயிண்ட் வாடை ஓடியே போய்விடும்!

காலையில் அரக்கப் பறக்க வேலைக்கு செல்பவர்கள், இரவு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பாத்திரங்கள் முழுவதையும் தேய்த்து சுத்தப்படுத்தி விடவும். இல்லாவிட்டால் காலையில் பாத்திரம் தேய்ப்பது ஒரு இமாலய வேலையாகத் தெரியும்.

முட்டை கீழே விழுந்து உடைந்து விட்டால்... அதன் மேல் உப்பு போடவும். சிறிது நேரத்துக்குப் பின்னர் துடைத்துவிட்டால் சுத்தம் செய்வது எளிது. வாடையும் இருக்காது.

அசைவ உணவுகளை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுத்த பிறகும், வாசனை போகாது. வாஷிங் லோஷன் இல்லாவிட்டால் பவுடர் போன்றவற்றை ஓவனில் கொஞ்சநேரம் வைத்து எடுங்கள். உணவின் வாசனை போயே போச்...!

விளக்கெண்ணை, கடலை எண்ணை, இலுப்பை எண்ணை ஆகிய மூன்றையும் கலந்து விளக்கு ஏற்றினால், நீண்ட நேரம் விளக்கு எரியும். எண்ணையும் குறையாது. ஆடைகளில் எண்ணைக் கறை பட்டு விட்டால் கவலை வேண்டாம். அதன் மீது சிறிது ஆல்கஹாலை தேய்த்துவிட்டு அப்புறம் துவைத்தால் கறை போய்விடும்.

வாஷிங் மெஷினில் துணியை போடும்போதோ அல்லது அழுக்கு துணிகளை வாளியில் உள்ள சோப்பு நீரில் ஊற வைக்கும்போதோ அதனுடன் சிறிதளவு ஷாம்பு சேர்த்தால் துவைக்கும் துணிகள் காய்ந்த பிறகும் கமகம வாசனையாக இருக்கும்.

சமையலறை மேடை மீதும், கப்போர்டுகள் மீதும் அடிக்கடி அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வாரம் ஒருமுறையாவது நன்றாக துடைத்தால் தான் சுத்தமாக இருக்கும். இதற்கு எளிய வழி உண்டு. சமையலறை மேடை மற்றும் கப்போர்டுகள் மீது பாலிதீன் பேப்பர்களை ஒட்டி வைத்து வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.

பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதை தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.

தினமும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் வெந்நீர் வைக்க மற்ற பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். குக்கரையே காஸ்கட் போடாமல் தண்ணீர் ஊற்றி வைத்தால் சிக்கிரமே சூடாகி விடும். அதேபோல், இளஞ்சூடான நீரில் துணிகளை துவைத்தால் எளிதில் அழுக்கு போய்விடும்.

உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கிறதா? அப்படி என்றால் ஒரு சின்ன ஐடியா... உங்களுடைய செல்லத்தை டிவி அறையில் உட்கார வையுங்கள். அல்லது அதன் அருகில் ரேடியோவை பாட விடுங்கள். யாரோ பேசுவதாக நினைத்து கொஞ்ச நேரம் குரைத்து விட்டு அமைதியாகி விடும்.

ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் "பிளீச்சிங் பவுடரை" கரைத்து, அதில், கரை படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.

அதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.

பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.

எலுமிச்சை தோலை வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், சோப்பு பவுடருடனோ, சபீனாவுடனோ கலந்து பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடலை மாவுடன் கலந்து வைத்து, உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.

டீ, காபி கரை உள்ள பாத்திரங்களில், சிறிதளவு உப்புத் தூளைத் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துப் பின் கழுவினால் கரை நீங்கும்.

முட்டை, வெங்காயம், பூண்டு சமைத்த பாத்திரங்களில் ஏற்படும் வாடை நீங்க, பாத்திரத்தில் உப்பு போட்டு தேய்த்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எண்ணெய் வைக்கும் பாத்திரங்களில் பிசுக்கு வாடை நீங்காமல் தொல்லை கொடுக்கும். சிகைக்காய்ப் பொடியால் தேய்த்துக் கழுவி, பிறகு எலுமிச்சைத் தோல் பொடியைத் தேய்த்தால், வாடை நீங்கி, பாத்திரம் பளபளக்கும்.

பிசுக்கு நிறைந்த பாத்திரத்தைச் சுத்தம் செய்ய, கடலை மாவு கூட பயன்படும். கடலை மாவை பாத்திரத்தில் தூவி, வழித்து எடுத்தால் ஓரளவு பிசுக்கு நீங்கும். அதன் பின், சிகைக்காய் பொடி போட்டு தேய்க்கலாம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner