Ads Header

Pages


10 June 2012

வீட்டுக் குறிப்புகள்...

டிப்ஸ்:வீட்டுக் குறிப்புகள்...

Home Tips - Tips for Women

சாம்பாரோ, ரசமோ கொதிக்கும்போது அமர்க்களமான வாசனை வந்தால், அதில் உப்பின் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஈரம் இல்லாத கொத்தமல்லி, கறிவேப்பிலை, துளசி இலை, பச்சை மிளகாய் போன்றவற்றை ஜிப் லாக் கவர்களில் போட்டு,ஃப்ரிட்ஜில் வைத்தால் பல நாட்கள் வரை அப்படியே இருக்கும்.

காபி போடும்போது, முதலில் ஃபில்டரில் அரை டீஸ்பூன் சர்க்கரை போட்டு, பிறகு காபி பவுடர் போட்டு, டிகாஷன் எடுத்தால் காபி ருசியாக இருக்கும்.
வெந்தயத்தை முந்தின இரவு ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும்.

இரும்புச் சத்து உடம்பில் குறைவாக உள்ளவர்கள், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெல்லப்பாகை உட்கொள்வது நல்லது.

தினமும் படுப்பதற்கு முன் பால் ஏட்டை கன்னங்களில் தடவி, காலையில் முகத்தைக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருப்பதுடன் பருக்களும் வராது.

இரவில் படுப்பதற்கு முன் உள்ளங்கால்களில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்து கொண்டு படுத்தால், காலையில் எழுந்தவுடன் கால்கள் ஊன்றி நடக்கும்போது வலி இருக்காது.

கண்களின் மேல் வரும் சிறு சிறு கட்டிளுக்கு, நாமக்கட்டியை குழைத்துப் போட்டால் கட்டி மறைந்து விடும். மரப்பாச்சி பொம்மையையும் சிறிது நீர் விட்டு தேய்த்துப் போடலாம்.

குழந்தைகளுக்கு பள்ளிக்கு கோந்து, பெயிண்ட் போன்றவற்றைக் கொடுத்து அனுப்ப வேண்டுமா? அந்த டப்பாக்களை ஒரு ஜிப் லாக் கவரினுள் போட்டு வைத்து கொடுத்து அனுப்பினால் பையில் கொட்டாது.

தரை துடைக்கும்போது, கொஞ்சம் ஷாம்பூவையும் தண்ணீரில் கலந்து துடைத்தால் வீடு கமகமக்கும். பிசுபிசுக்கான விளக்குகள், நகைகள், வெள்ளி பாத்திரங்கள் போன்ற பொருட்களை கழுவும்போது ஷாம்பூ சேர்த்தால் பிசுக்கு நீங்கி புத்தம் புதிதாகி விடும்.

கடிதங்களையும் பேப்பர்களையும் போட்டு வைக்க சுவரில் மாட்டும் லெட்டர் ஹோல்டர் பைகளை உபயோகிப்போம்... இத்தகைய ஒரு ஹோல்டரை உங்கள் பீரோவின் கதவுக்கு உள்பக்கமாக மாட்டி வைத்தால், அதில் மின்சார அட்டை, கேபிள் கார்டு, ரேஷன் கார்டு, பாங்க பாஸ் புத்தகங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது சிரமமில்லாமல் டக்கென்று எடுக்கலாம்.

சுவர்களில் படங்கள் ஒட்டும்போது கம் போட்டு ஒட்டாமல் செல்லோ டேப் போட்டு ஒட்டினால், எடுக்கும்போது படமும் கிழியாது... சுவரும் பாழாகாது.

குளியலறையில் பல நாட்களுக்கு நல்ல மணம் பரவி இருக்க வேண்டுமா? கால் மக் தண்ணீரில் ஒரு பாக்கெட் ஷாம்பூவை கரைத்து, சுவரின் மேல் பரவலாகத் தெளித்து விடுங்கள். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் உங்கள் பாத்ரூம் மணம் வீசும்.

துணி துவைக்கும்போது சோப்புடன் ஒரு பாக்கெட் ஷாம்பூவும் சேர்த்து விட்டால், துணி வியர்வை நாற்றம் மறைந்து மணமாக இருக்கும். பட்டு, சில்க் காட்டன் போன்ற துணிகளை ஷாம்பூவால் துவைத்தால் பளபளப்பு மங்காது.

வெளியூருக்கு கவரிங் நகைகளை எடுத்துச் செல்வதானால், ஜிப் லாக் கவர்களில் வைத்து எடுத்துச் செல்லலாம். இதனால் நகைகள் பழசாகாமல், அப்படியே இருக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner