Ads Header

Pages


10 June 2012

வீட்டுக்குறிப்புக்கள் டிப்ஸ்!

டிப்ஸ்! தேன் கெடாமலிருக்க...

Tips for Women

தேன் பாட்டிலில் இரண்டு மிளகை போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது. நீண்ட நாள் தேன் கெட்டுப்போகாமலிருக்க, இரண்டு அல்லது மூன்று நெல்மணிகளை தேனில் போட்டு வைத்தால் தேன் எவ்வளவு நாள் ஆனாலும் கெடாது.

ரவையில் பூச்சி வராமலிருக்க ஆறு அல்லது ஏழு கிராம்புகளை போட்டு வைக்க வேண்டும்.

அரிசியில் சிறிது போரிக் பவுடரை போட்டு வைப்பதன் மூலம் பூச்சி வருவதை தவிர்க்கலாம்.

புதினாவை காய வைத்து, அதை பவுடராக்கி, 10 கிலோ அரிசிக்கு 50 கிராம் பவுடரை போட்டு வைத்தால் புழு, வண்டு வராது. இது பூச்சி வருவதை தடுப்பது மட்டுமின்றி உணவில் சுவையையும் கூட்டும்.

பூண்டை உரிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், குளிர்ந்த நீரில் போட்டு ஊற வைத்து, அதன்பின் தோலை உரித்தால் எளிதில் வந்து விடும். அல்லது தனித்தனி பல்லாக எடுத்துக் கொண்டு, வெறும் வாணலியில் நன்றாக வதக்கி விட்டு உரித்தால் சுலபமாக உரிக்கலாம்.

பச்சை நிற காய்கறிகள் நிறம் மாறாமலிருக்க, சமைக்கும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து சமைக்க வேண்டும்.

ஊறுகாயில் பூஞ்சை படர்வதைத் தடுக்க, எண்ணெயை நன்றாக கொதிக்க வைத்து, ஆறிய பின் ஊற்ற வேண்டும்.

கேக்கில் முட்டை சேர்த்து செய்யும் போது, முட்டை வாடை அடிக்கும். கேக் மாவுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து செய்தால் வாடை இருக்காது.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner