'என்னோட பேரன் இவன்... என்னமோ கை காலெல்லாம் நடுங்குதுங்குறான்...
படிச்சதெல்லாம் மறந்து போகுதுங்குறான்... விளையாடிட்டு வந்தா மூட்டுக்கு
கீழ வலிக்குதுங்குறான்... என்னென்னே தெரியல.... நல்லாத்தாம்ல இருந்தான்...
திடீர்னு இப்பிடிச் சொல்றான்...
சீரகம் - 5 கிராம்
சோம்பு - 5 கிராம்
ஏலம் - 2
மணத்தக்காளி விதை - 5 கிராம்
கீழாநெல்லி - 5 கிராம்
வெள்ளை கரிசலாங்கண்ணி - 5 கிராம்
ஆரைக்கீரை - 5 கிராம்
கொத்தமல்லி - 5 கிராம்
கறிவேப்பிலை - 5 கிராம்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - 4
மிளகு - 4
இது எல்லாத்தையும் எடுத்து 2 கொவள தண்ணி விட்டு 1 கொவள தண்ணியா வத்தற
வரைக்கும் நல்லா கொதிக்க வச்சி சூப் மாதிரி சாப்பிடச் சொல்லு.
இப்பிடி வாரத்துல மூணு நாளைக்கி காலைல இல்லாட்டி சாயங்காலம் ஒரு வேள
மட்டும் குடிச்சிட்டு வந்தா சீக்கிரம் குணமாயிடுவான்...'

0 comments:
Post a Comment