Ads Header

Pages


Showing posts with label சட்டங்கள். Show all posts
Showing posts with label சட்டங்கள். Show all posts

27 April 2012

எந்தெந்த பிரச்னைகளுக்கு ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்? - உங்களுக்கு உதவும் சட்டங்கள்!


நாம் ஒரு பொருளை வாங்கி, அது சரியில்லாவிட்டால் ‘கன்ஸ்யூமர் கோர்ட்டு’க்குப் போகலாம். சொத்துத் தகராறு என்றால் ‘உரிமையியல் நீதிமன்றங்கள்’ என்கிற சிவில் கோர்ட்டுக்குப் போகலாம். திருட்டு, அடிதடி போன்ற குற்றங்கள் என்றால் ‘குற்றவியல் நீதிமன்றங்களை’ நாடலாம்.

இதெல்லாம் சரி... அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கோ என்ன செய்வது?

இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு என்றே இருக்கிறது ‘ரிட் மனு’.

அதென்ன ரிட்?

‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!

எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம். உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்டரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் புகார் செய்யலாம். அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம். தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்தது கூட அந்தப் பகுதி மக்கள் ‘ரிட்’ மனு தாக்கல் செய்த பின்புதான்.

எந்தெந்த பிரச்னைகளுக்கு ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

ஐந்து வகைகளில் ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம். முதல் வகை, ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’. இதற்கு ஆணையிடும் நீதிப் பேராணை என்று பொருள். அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.

சாலையின் பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

அடுத்தது ‘செர்ஷியோரரி (certiorari) ரிட்.’ ஒரு ஹைகோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள, ஒரு கோர்ட் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை. என்ன புரியவில்லையா? உதாரணமாக, ஒரு சினிமா தியேட்டர் கட்டுவதற்கு கலெக்டரிடம் ‘நோ அப்ஜக்ஷன்’ ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத்தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ்பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேஷபணையைப் பரிசீலிக்காமல், நோ அப்ஜக்ஷனை கலெக்டர் தந்தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.

மூன்றாவது ரிட் மனுவிற்கு ‘கோவாரண்டோ’ (Quowarranto) என்று பெயர். எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லாமல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித்தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ தாக்கல் செய்யலாம்.

அடுத்தது பிரொகிபிஷன் (Prohibition) ரிட். அதாவது ஒரு நீதிமன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பதற்காகப் போடப்படுவது இது.

அடுத்தது ‘ஹெபியஸ் கார்பஸ்’ (Hebeas corpus) ரிட். இதற்குத் தமிழில் ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம். இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டுமானாலும் போடலாம். ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்டமாஸ்’, ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யலாம்.
Read more

26 April 2012

தகவல் அறியும் சட்டத்தை எப்படி பின்பற்ற வேண்டும்?

நமக்குத்தேவையான தகவல் களைப் பெற தகவல் அறியும் சட்டத்தை எப்படி பின்பற்ற வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன?

எந்தத் துறை சம்பந்தப் பட்ட தகவல்கள் உங்களுக்குத் தேவையோ, அந்தத் துறையின் பப்ளிக் இன்ஃபர்மேஷன் அலுவலருக்கு, உங்களுக்குத் தேவையான தகவல்பற்றி கடிதம் எழுதவேண்டும். அப்படி எழுதும்போது உங்களைப் பற்றிய முழுதகவல் மற்றும் விலாசம் தெளிவாக இடம்பெறவேண்டும்.

உங்களுக்குத் தேவையான தகவலை தெளிவாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு பத்து ரூபாய் கட்டணத்தையும் அத்துடன் இணைத்துஅனுப்ப வேண்டும். கட்டணத்தை டிடியாகவோ பேங்கர்ஸ் செக்காகவோ அனுப்பலாம்.

உங்களுக்குத் தேவைப்படும் தகவல் ஒரு பக்கத்துக்கு மிகுந்தால், அதிகப்படியான பக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். நீங்கள் கேட்கும் தகவலின் தன்மையைப் பொறுத்து, அதற்குத் தேவையான கட்டணத்தை நீங்கள் முன்கூட்டியே அனுப்புவது நல்லது.

அதற்குப் பின்னும் உங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஸ்டேட் இன்ஃபர்மேஷன் கமிஷனுக்கு நீங்கள் புகார் செய்யலாம். அப்படி புகார் செய்யும்பொழுது அவர்களால் நீங்கள் கேட்கும் தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து பெற்றுத்தர முடியுமே தவிர, உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்க முடியாது.

ஸ்டேட் இன்ஃபர்மேஷன் கமிஷனை நீங்கள் தொடர்புகொள்ள கீழ்கண்ட முகவரி மற்றும் இணைய தளத்தைப் பயன்படுத்தலாம். விலாசம்: ஸ்டேட் இன்ஃபர்மேஷன் கமிஷன். காமதேனு சூப்பர் மார்க்கெட் பில்டிங். முதல் மாடி, தேனாம்பேட்டை சென்னை. போன் : 044 24357580, இணையதள முகவரி: www.tnsic.gov.in
Read more

19 April 2012

கம்பெனி தொடங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்


நீங்கள் ஒரு பிஸினஸ் செய்கிறீர்கள் என்றால், பொதுவாக அந்த நிறுவனத்தை கம்பெனி என்றுதான் சொல்லுவோம். ஆனால், பிஸினஸை தனி நபர் வியாபாரம், கூட்டு வியாபாரம் மற்றும் கம்பெனி என்று மூன்று விதமாக பிரிக்கலாம். இதில் கம்பெனி என்று ஆரம்பிக்கும்போது நாம் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம்.

கம்பெனி தொடங்குவதற்கு, ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸில்தான் விண்ணப்பிக்க வேண்டும். இப்பொழுது எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்டதால், ஆன்லைனிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். முதலில் ரூ.500/_ கட்ட வேண்டும் (கிரெடிட் கார்டில் கட்டிக் கொள்ளலாம்.) கம்பெனிக்கான ஐந்து பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பெயர்கள், நாம் செய்யும் பிஸினஸ§க்குத் தொடர்புடையதாக இருப்பது அவசியம். உதாரணமாக சாஃப்ட்வேர் பிஸினஸ் என்றால் கம்ப்யூட்டர் தொடர்பாகத்தான் இருக்க வேண்டும். அத்துடன் ஃபார்ம் 1கி படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதில் கம்பெனி ஆரம்பிக்கும் (பப்ளிக் லிமிடெட் என்றால் குறைந்த பட்சம் ஏழு பேர். பிரைவேட் லிமிடெட் என்றால் குறைந்த பட்சம் இரண்டு பேர்) இரண்டு பேரின் பெயர், முகவரியோடு கொடுக்க வேண்டும். அத்துடன் நாம் ஆரம்பிக்கப்போகும் மெயின் பிஸினஸ் பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பெயர்கள், நாம் செய்யப் போகும் பிஸினஸ§க்கு எப்படி தொடர்புடையது என்பதையும் நியாயப்படுத்த வேண்டும்.

நாம் போடப் போகும் முதலீடு (பிரைவேட் லிமிடேட் கம்பெனி என்றால் ரூபாய் ஒரு லட்சம் இருக்க வேண்டும்) எவ்வளவு என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலே சொன்னவற்றையெல்லாம் முடித்து, விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டால், பத்து நாட்களுக்குள் அப்ரூவல் வந்துவிடும். அப்ரூவல் வந்த பிறகு, மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷன்’ (மெயின் பிஸினஸ் மற்றும் அதன் தொடர்புடைய பிஸினஸ் பற்றிய விவரங்கள்), ‘ஆர்டிகிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் (கம்பெனி இயங்கும் விதம், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் போன்றவை) ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸ் அலுவலகத்தில் கொடுத்து உரிய கட்டணத்தைக் கட்டி ஒப்புதல் வாங்க வேண்டும். செய்யும் முதலீடுக்குத் தகுந்தாற்போல் இந்தக் கட்டணம் மாறுபடும்.

கம்பெனி தொடங்குவதற்கு முன் கீழ்க்கண்ட ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்:

மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷன் மற்றும் ஆர்டிகிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் இரண்டையும், டைரக்டர்கள் எல்லோரும் கையெழுத்துப் போட்டு, அவர்களுடைய பெயர், முழு முகவரி, தற்போது செய்து வரும் வேலை போன்றவற்றைக் குறிப்பிட்டு கொடுக்க வேண்டும்.

ஃபார்ம் _1ஐ ரூ.20/_ மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் (பத்திரங்கள் பதிவு செய்யும் முத்திரைத்தாள்), தேவைப்பட்ட விவரங்களைக் கொடுத்திருப்பதாக உறுதி அளித்துக் கொடுக்க வேண்டும். ஃபார்ம் _18ல் கம்பெனியின் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் பற்றி குறிப்பிட்டு கம்பெனியின் ஒரு டைரக்டர் கையெழுத்துப் போட்டு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

ஃபார்ம்_32ல் டைரக்டர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தை, அவர்களின் கையெழுத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும்.

கம்பெனியின் பெயர் அங்கீகரிக்கப்பட்ட கடிதம்.

மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷனில் பெயர் குறிப்பிட்ட அனைவரும் கையெழுத்துப் போட்டு டைரக்டர்களில் யாராவது ஒருவருக்கு, ‘சர்டிஃபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்’ வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட, பொது அதிகாரப் பத்திரம் கொடுக்க வேண்டும்.

இவையெல்லாம் கொடுத்த பிறகு, ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பனிஸ்’ அலுவலகத்திலிருந்து ஒருநாளைக் குறிப்பிட்டு, அந்த ஆவணங்களைச் சரி பார்க்க அழைப்பார்கள். எல்லாம் சரியாக இருந்தால் ‘சர்டிஃபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்’ கிடைத்துவிடும். அது வந்தவுடன் நமது பிஸினஸைத் தொடங்கிவிடலாம்.
Read more

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது.

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!

பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.

நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?

தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.
Read more

பாஸ்போர்ட் வாங்கும் முறை பற்றி விளக்குகிறார் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி


‘‘உண்மையில் இந்த பரபரப்புக்கும் டென்ஷனுக்கும் அவசியமே இல்லை. இங்கே காலில் கஞ்சியைக் கொண்டது போல் கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் வாங்க வருபவர்கள்தான் டென்ஷனை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் நிதானமாக விண்ணப்பித்தால், தபால் மூலமே பாஸ்போர்ட், வீடு தேடி வந்துவிடும். அலைச்சலே வேண்டாம். டென்ஷனும் வேண்டாம்.’’ எல்லோருக்கும் வெளிநாடு போகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், ஒரு ஐடென்டிடி கார்டாகவாவது பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது சிலருக்கு எதிர்காலத்தில் வெளிநாடு போகும் வாய்ப்பும் ஏற்படலாம்.

பாஸ்போர்ட் வாங்குவது என்பதே ரொம்ப கஷ்டமான வேலை என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. இதைச் சுலபமாக எப்படி வாங்குவது?

முன்பு விண்ணப்பம் பூர்த்தி செய்வது கொஞ்சம் சிக்கலாக இருந்ததாக மக்கள் நினைத்ததால், இப்படித் தோன்றியிருக்கலாம் இப்போது மிக எளிதாக்கி விட்டோம்.

ஃபார்ம்_1 என்ற விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, 3 பாஸ்போர்ட் அளவிலான ஃபோட்டோக்கள், வசிப்பிடத்துக்கு சான்றாக, ரேஷன் கார்டு, தற்போது உள்ள பேங்க் ஸ்டேட்மெண்ட், டெலிஃபோன் பில், மின்சார ரசீது, தண்ணீர் வரி ரசீது, வாக்காளர் அட்டை, மூன்று வருடத்திற்கான வருமானவரி அசெஸ்மெண்ட் ஆர்டர், புகழ்பெற்ற கம்பெனிகளில் வேலை செய்பவராக இருந்தால், அந்த கம்பெனியின் லெட்டர் ஹெட்டில் இருக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் போன்று மேலே சொன்ன 8 ஆவணங்களில் ஏதாவது ஒன்றையும், வயது சான்றிதழும் இணைத்து, விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். அரசாங்க அலுவலராக இருந்தால், தடையில்லாச் சான்றிதழையும், (No objection certificate) சேர்த்து கொடுக்க வேண்டும்.

இங்கே இவ்வளவு கூட்டம் இருக்கிறதே! இந்த கூட்டத்தில் விண்ணப்பிப்பது சிரமமாக இருக்காதா?

இங்கே வந்துதான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. சென்னையைப் பொறுத்தவரை எக்மோரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அல்லது அண்ணாநகர், அடையாறு மற்றும் பூக்கடையிலுள்ள டெபுடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஸ்பீட் போஸ்ட்’ அலுவலகங்கள், மற்றும் மாவட்ட பாஸ்போர்ட் மையங்களில் விண்ணப்பங்களை வாங்கி, பூர்த்தி செய்து அங்கேயே தந்துவிட்டுப் போகலாம்! முறைப்படி. போலீஸ் விசாரணை முடிந்ததும், எங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும். பாஸ்போர்ட் கொடுப்பதும் இங்கேயிருந்துதான்! எல்லாம் சரியாக இருந்தால் ‘ஸ்பீட் போஸ்டில்’ பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும். இதில் எந்தப் பிரச்னையும் கிடையாது.

யாருக்காவது பாஸ்போர்ட் கொடுக்க மறுப்பது உண்டா?

பொதுவாக எல்லா இந்தியர்களும், பாஸ்போர்ட் வாங்கத் தகுதியானவர்கள்தான். ஆனால், போலீஸ் விசாரணையில் அவர்களுக்குத் திருப்திகரமாக இல்லையென்றாலோ, அல்லது அவர்கள், ஏதாவது சட்டம் மற்றும் தேச விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வந்தாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதில்லை.

ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?

ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டை பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

வெளிநாட்டில் வசிக்கும் காலங்களில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது?

அந்தந்த நாட்டிலுள்ள, இந்திய தூதரகத்தில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

பாஸ்போர்ட் வாங்குவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது. இதற்குப் போய் எதற்காக டென்ஷனாக வேண்டும்? ரிலாக்ஸ்டாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்களேன்!


‘தட்காலில்’எப்படி பாஸ்போர்ட் வாங்குவது?

முன்பு ‘தட்கால்’ முறையில் பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென்றால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஏதாவது ஓர் உயர் அதிகாரியிடமிருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டும். அவசரத்திற்காகத்தான், அதிக பணம் கொடுத்து பாஸ்போர்ட் வாங்குகிறார்கள். அந்த அவசரத்தில், இந்த சான்றிதழ் வாங்குவது சிரமமாக இருப்பதால், கீழ்வரும் 14 ஆவணங்களில் ஏதாவது மூன்றையும் நோட்டரி பப்ளிக் சான்றளித்த உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) ஒன்றையும் இணைத்துக் கொடுத்தால் போதும், 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கொடுக்கப்படும். போலீஸ் விசாரணை உண்டு.

1. வாக்காளர் அடையாள அட்டை 2. மத்திய அல்லது மாநில அரசு, பொதுத்துறை அரசு நிறுவனங்கள், உள்ளாட்சித்துறை அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கொடுக்கப்படும் அடையாள அட்டை.

3. ஜாதி சான்றிதழ் (எஸ்.ஸி./எஸ்.டி./ஓ.பி.சி.)

4. தியாகி அடையாள அட்டை

5. துப்பாக்கி லைசன்ஸ்

6. அசையாச் சொத்துக்களின் ஆவணங்களான பட்டா, பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் போன்றவை.

7. ரேஷன்கார்டு

8. பென்ஷன் வாங்குபவராக இருந்தால் அது தொடர்பான ஆவணங்கள்.

9. ரெயில்வே அடையாள அட்டை.

10. வருமானவரி அடையாள அட்டை (Pan Card)

11. வங்கி, விவசாயி மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் பாஸ்புக்.

12. படிக்கும் கல்வி நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை

13. ஓட்டுனர் உரிமம்.

14. பிறப்பு சான்றிதழ்

பாஸ்போர்ட் கட்டணம்

விண்ணப்பப்படிவம் ரூ.10/_
சாரண பாஸ்போர்ட்டுக்கு ரூ.1,000/_
தட்காலுக்கு ரூ. 2,500/_
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.600/_
Read more

17 April 2012

மோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு

ஒரு வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப் பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து நம்மை வெளியேற்றிவிடலாம்.

ஹைவே டிபார்ட்மென்ட்டோ அல்லது அரசுத் துறையோ ‘இது புறம்போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை இடித்துவிட்டுக்கூட போகலாம். இதே போன்ற பிரச்னைகள்தான் வாகனம் வாங்கும்போதும் ஏற்படும்.

ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்...

‘‘சார், நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கினேன். 18 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, அட்வான்ஸாக பத்தாயிரம் கொடுத்தேன். அந்த வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் ஃபைனான்ஸ் கம்பெனியில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபாயைக் கொடுப்பதாகப் பேசினோம். மூன்று மாதம் ஆகியும் ஆர்.சி.புத்தகம் தரவில்லை. பல முறை கேட்டுப் பார்த்தும் பயனில்லை. ‘பத்தாயிரம் ரூபாய்க்கு நல்ல கண்டிஷனில் உள்ள பைக் கிடைத்திருக்கிறதே’ என்று நானும் ஆர்.சி.புத்தகம் கேட்பதையே விட்டுவிட்டேன்’’ என்றார்.

‘‘ஆர்.சி.புத்தகத்தை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நாளைக்கு ஏதாவது விபத்து போன்ற பிரச்னைகள் வந்தால் ரொம்ப ரிஸ்க்காகிவிடும்’’ என்று நான் சொன்னதும், ‘‘பேலன்ஸ் 8 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு ஆர்.சி.புத்தகத்தை வாங்கி


வந்துவிடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றவர், ஒரு வாரம் கழித்து திரும்ப வந்து, ‘‘சார் என் பைக்கை இரண்டு நாளைக்கு முன்னாடி போலீஸ் வந்து தூக்கிட்டுப் போயிட்டாங்க... அது திருட்டு பைக்காம். எனக்கு பைக் விற்றவன் 20 வண்டிகளுக்கு மேல திருடியதாச் சொன்னாங்க... இப்ப அந்த பத்தாயிரம் ரூபாயை திரும்ப வாங்குவது எப்படி?’’ என்றார்.

‘‘நீங்க கவனக்குறைவா இருந்ததற்கு இந்தப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று நினைத்து விட்டு விடுங்கள். இதைத் தெரிந்தோ தெரியாமலோ வாங்கியதற்கே உங்கள் மீது திருட்டுப் பொருளைப் பெற்றதாக வழக்குப்போடலாம். அட்லீஸ்ட், அந்த வழக்கிலிருந்து தப்பித்தோம் என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள்’’ என்று சொன்னேன். இந்தச் சம்பவம் பைக்குக்கு மட்டும் அல்ல, எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும்!

நாம் ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி, பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் டீலர் நமக்குக் கொடுத்து விடுகிறார். நாம் நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம். ஆனால், பழைய வாகனத்தை வாங்கும் போது எப்படி உரிமையை மாற்றிக்கொள்வது? ஆர்.சி. புத்தகம் இல்லாமல் அதை வாங்கலாமா?

ஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்-களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.

ஒருவர் தனது காரை பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருப்பவருக்கு விற்பனை செய்திருந்தால், 14 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29&ல் பூர்த்தி செய்து, மோட்டார் வாகனப் பதிவு அலுவலகங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அதன் நகலை நம்மிடமிருந்து வாகனத்தை வாங்கியவருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்பனை செய்பவரின் கடமை.

ஒரு வேளை நாம் வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வாகனத்தை விற்பனை செய்து இருந்தால், விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு நாம் தகவல் தரவேண்டும். அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No objection Certificate) அல்லது தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வைத்து அனுப்ப வேண்டும்.

வாகனத்தை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ அந்த மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷ¨ரன்ஸ் அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வெளி மாநிலமாக இருப்பின், தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்க-வில்லை என்பதற்கான ஆதாரங்-களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு 30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்படி வாங்குபவரோ, விற்பவரோ தங்கள் கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவராவர். வாகனத்தை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வாகனத்தை ஓட்டி ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷ¨ரன்ஸ் இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது.

புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில் மாற்றப்பட்டதும் அதன் நகலை இன்ஷ¨ரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷ¨ரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது! ஒருமுறை பதிவு செய்த வாகனத்தை மறுபதிவு செய்யமுடியுமா?

ஒருமுறை வாகனத்தைப் பதிவுசெய்துவிட்டால், மீண்டும் பதிவுசெய்து புதிய எண் பெற முடியாது. அந்த வாகனத்தின் பதிவுக் காலம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும். எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான். உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான். ஆனால், நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். நாம் சென்னையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தும்போது கர்நாடகப் பதிவு ரீ&ரெஜிஸ்ட்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும்!


பதிவை மறுக்க முடியுமா?

ஒரு வாகனம் திருடப்பட்டது என்று சந்தேகிக்கக் காரணம் இருந்தாலும், வாகனம் சாலையில் ஓடும்போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்குள் அந்த வாகனத்தின் தன்மை, அமைப்பு போன்றவை இல்லை என்றாலும், பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரவில்லை என்றாலும், தவறான தகவல்களை மனுதாரர் கொடுத்திருந்தாலும், வேறு மாநில வாகனம் என்றால் அதன் முந்தைய பதிவு எண் விவரங்கள், சான்றுகள் ஆகியவற்றை தரவில்லை என்றாலும் பதிவு செய்யும் அதிகாரி எழுத்துப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய மறுக்கலாம். இதன் ஒரு நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்!


வாகன உரிமையாளர் இறந்துவிட்டால்...

ஒரு வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்படுத்தப்போகும் வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30 நாட்களுக்குள் உரிமையாளர் இறந்துபோனது பற்றியும், அதை தான் பயன்படுத்தப் போவதையும் தகவல் கொடுத்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். இந்தக் காலகட்டத்துக்குள் ஆர்.சி.புத்தகம், இன்ஷ¨ரன்ஸ், உரிமையாளரின் இறப்புச் சான்று மற்றும் அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31&ல் இறந்துபோனவரைப் பற்றிய முழு விவரங்களையும், தற்போது பயன்படுத்துபவர் பெயர், விலாசம், உறவுமுறை ஆகியவற்றையும் குறிப்பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகளுடன் மனு செய்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
Read more

வாடகை கட்டிடங்கள் குறித்தது சட்டம் செல்வதென்ன!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

''நான் கடந்த 1993-ல் அம்பத்தூர் அயப்பாக்கத்தில் வீடு கட்டி, வாடகைக்கு விட்டேன். தற்போது, குழந்தைகளின் படிப்பு காரணமாக வீடு எனக்குத் தேவைப்படுவதால், வாடகைக்கு இருப்பவரிடம் வீட்டை காலி செய்ய சொன்னேன். அவரும் சம்மதித்து, வெள்ளை அடித்த செலவாக 20,000 ரூபாயையும், நாங்கள் முன்பணமாக பெற்ற தொகை 15,000 ரூபாயையும் பெற்றுக் கொண்டார். அவர் வீட்டைக் காலி செய்வார் என்று நான் காத்திருக்க, என் வீடு தேடி வந்தது 'ஸ்டே இன்ஜெங்ஷன் ஆர்டர்'! போன் செய்து கேட்டபோது, '2 லட்சம் ரூபாய் தந்தால்தான் வீட்டை காலி செய்வேன். அப்படியில்லையென்றால் உச்சநீதிமன்றம் வரையிலும் செல்வேன்' என்று மிரட்டுகிறார்.

என்னிடம் எதுவும் விசாரிக்காமல் இப்படி ஒரு ஸ்டே ஆர்டரை கோர்ட்டால் தர முடியுமா?

வழக்கு என்று போனால் நியாயம் கிடைக்க வருடங்களாகும் என்கிறார்களே.. இப்போது என் அவசரத்துக்கு பணத்தைக் கொடுத்துத்தான் வீட்டை காலி செய்ய இயலுமா?

வீட்டுக் கடனைக் கட்டிக் கொண்டிருக்கும் என் போன்ற எளியோருக்கு சட்டத்தில் நீதிக்கு இடம் இருக்கிறதா?''


சங்கரராமன் வழக்கறிஞர் கடலூர்,

''பொதுவாக வீட்டை வாடகைக்கு விடும்போது எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. இதற்கு வீட்டு வாடகை, முன்பணம் (பத்து மாத வாடகையை முன்பணமாகப் பெறலாம்) வாடகைக்கு விடும் தேதி உள்ளிட்ட விவரங்களை எழுதி, 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் 'அக்ரிமென்ட்' போட்டு, வீட்டு உரிமையாளரும் வாடகைதாரரும் கையெழுத்திட்டு ஆளுக்கு ஒரு 'காப்பி' வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்வதால் இருதரப்பினரும் நேரடியாக நீதிமன்றத்தை அணுகுவதற்கும், கேஸ் போடும்பட்சத்தில் விரைவில் வழக்கை முடிக்கவும் வழிவகுக்கும்.

ஆனால், பெரும்பாலானவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வாய்மொழி உத்தரவில்தான் வீட்டை வாடகைக்கு விடுகின்றனர். இப்போது சட்டப்படி நீங்கள் என்ன செய்யலாம் என்று சொல்கிறேன்..

ஒரு வாடகைதாரரை வெளியேற்ற வேண்டும் என்றால், அதற்கு தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும். உதாரணத்துக்கு: தொடர்ந்து 3 மாதங்களாக ஒருவர் வாடகை கட்டத் தவறும் பட்சத்தில் 'வேண்டுமென்றே வாடகை கட்டத் தவறுகிறார்' - என்று காரணம் காட்டி, 'அவர் குடியிருக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும்' என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம்.

வாடகைக்கு விட்டிருக்கும் இந்த வீட்டைத் தவிர வேறு எந்த சொத்தும் உங்களுக்கு இல்லை என்றால், 'நான் குடியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது' என்பதைக் காரணம் காட்டி வாடகைதாரரை வெளியேறச் செய்யலாம். வீட்டை இடித்துக் கட்டுதல், வீட்டுக் கடனை அடைக்க சிரமப்படுதல் போன்ற மேலும் சில வலுவான காரணங்களை சொல்லியும் வெளியேறச் செய்ய முடியும்.

மற்றபடி, சட்டத்துக்குப் புறம்பாக வாடகைதாரரை குடியிருக்கும் இடத்திலிருந்து வெளியேற்ற முடியாது. அவ்வாறு வெளியேற்றும் முயற்சியை வீட்டின் உரிமையாளர் மேற்கொண்டால், வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு கோரலாம். 'வீட்டின் உரிமையாளர் சட்டத்துக்குப் புறம்பாகத் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கிறார்' என்பதற்கான ஆதாரங்களை வாடகைதாரர் சமர்ப்பிக்கும் பட்சத்தில், நோட்டீஸ் இல்லாமலேயே உரிமையாளருக்கு 'இடைக்கால உறுத்துக் கட்டளை' எனப்படுகிற 'இன்ஜெங்ஷன் ஆர்டர்' (மிஸீழீuஸீநீtவீஷீஸீ ஷீக்ஷீபீமீக்ஷீ) வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. இதைத்தான் வெகு ஜன மொழியில் தடை உத்தரவு (அ) ஸ்டே என புரிந்து கொள்கிறோம்.

ஆனால், இன்ஜெங்ஷன் ஆர்டர் வேறு. ஸ்டே வேறு! 'இன்ஜெங்ஷன் ஆர்டர்' என்பது நடக்கப் போகிற ஒரு விஷயத்தை நிறுத்துவது.. நடந்து கொண்டிருக்கிற ஒரு விஷயம் தொடராமல் நிறுத்தி வைப்பது 'ஸ்டே'.

தாங்கள் 'இன்ஜெங்ஷன் ஆர்டர்' பெற்றிருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்துக்குச் சென்று வாடகைதாரர் போட்டிருக்கும் வழக்கின் மீது தகுந்த பதிலைக் கொடுத்து, வழங்கப்பட்ட 'இன்ஜெங்ஷன் ஆர்டரை' இடைக்காலமாக நீக்க முடியும் (க்ஷிணீநீணீtவீஸீரீ tலீமீ ஷீக்ஷீபீமீக்ஷீ ஷீயீ வீஸீழீuநீtவீஷீஸீ). பிறகு, அவரை வெளியேறச் சொல்லி நீங்கள் வீட்டில் குடியேறலாம்.

பொதுவாக, நீதிமன்றங்களுக்கு வழக்குகள் வருகிறபோது 'இரு தரப்புக்கும் தகுந்த வாய்ப்பளிக்க வேண்டும்' என்ற நோக்கத்தினால் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதற்காக, 'உச்சநீதிமன்றம் வரை செல்வேன்' என்கிற அச்சுறுத்தலுக்கெல்லாம் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.

'பணம் கொடுத்துதான் வாடகைதாரரை காலி செய்யவேண்டும்' என்பது சட்டத்துக்கு விரோதமானது. ஒரு வழக்கறிஞரை சந்தித்து சமாதான முறையில் தீர்வு கண்டால் காலதாமதத்தையும் மன உளைச்சலையும் தவிர்க்கலாம். சமாதானமாக வழக்குகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் தற்போதைய நீதிமன்றங்களின் மனோநிலையும்கூட. பிரச்னைகளைக் கண்டு பயப்பட வேண்டாம். அவற்றை நேரடியாக சந்தித்து, சுமுகத்தீர்வு காண முயலுங்கள்.''
--------------------------------------------------------------------------------

வரலட்சுமி அம்மாளிடம் வீடு வாடகைக்கு வேண்டுமென்று வந்து கேட்ட சேகருக்கு, மாத வாடகை பேசி, வீட்டில் உள்ள போர்ஷனை வாடகைக்கு விட்டார்கள். அக்ரிமெண்ட் பற்றிய விவரம் தெரியாததால், சேகரின் வாய்வழி உறுதி மொழியை அப்படியே நம்பிவிட்டார் வரலட்சுமி அம்மாள். ஆனால், இரண்டே மாதத்தில் சேகர், அந்தப் போர்ஷனில் ஜெராக்ஸ் கடை வைத்து வியாபாரத்திற்குப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டான்.

வீட்டு உபயோகத்திற்காக என்று மின்சார கனெக்ஷனை வாங்கி வியாபாரத்திற்குப் பயன்படுத்தியதால் வரலட்சுமி அம்மாளுக்கு எச்சரிக்கையுடன் அபராதமும் விதித்து விட்டது மின்சார வாரியம்!

வாடகைக்கு வீடு கேட்டு வரும் சேகரைப் போன்ற ஆட்களை எப்படிச் சமாளிப்பது?

இதற்காகத்தான் சென்ற இதழில் சொன்னது போல், அக்ரிமெண்ட் அவசியம். அக்ரிமெண்டில் சட்டத்திற்குட்பட்ட ஷரத்துகளைப் போட வேண்டும். அதில் ‘குடியிருக்க’, ‘வியாபாரத்துக்கு’ போன்ற விஷயங்கள் இடம்பெற்று பெற்றுவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். அக்ரிமெண்ட் இல்லாவிட்டால்கூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

வீட்டுச் சொந்தக்காரர்கள் திரும்ப தங்களுக்கே வீடு வேண்டும் என்று கீழ்வரும் காரணங்களுக்காக, கோர்ட்டில் கேஸ் போடலாம்.

தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக வேண்டும்.

வாடகை சரியாக வரவில்லை.

கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், வீட்டை ரிப்பேர் செய்ய வேண்டும்.

வீட்டை சட்டத்திற்குப் புறம்பான காரியங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

ஓரிடத்துக்குப் பல வருடங்களாக, ஒரே வாடகையைத்தான் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். (குறிப்பாக தனியாரிடமிருந்து லீஸ§க்கு எடுத்து அரசு குத்தகைக்கு விட்டிருக்கும் பெட்ரோல் பங்குகள்) தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, வாடகையை நிர்ணயம் செய்யச் சொல்லியும் மனுதாக்கல் செய்யலாம்.

இன்னுமொரு முக்கியமான விஷயம், சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில், தற்போது தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருவது, பரவலாக நடக்கிறது. நான்கைந்து வாலிபர்கள் அல்லது பெண்கள் (உயிரே படத்தில் வரும் மனிஷா கொய்ராலா போல) வேலைக்குப் போவதாகவோ, காலேஜில் படிப்பதாகவோ சொல்லி வீடு எடுத்துத் தங்கி விடுவார்கள். அங்கே இருந்து கொண்டு, தங்களது அமைப்புகளுக்கு உதவியாக வேலை செய்வார்கள். இதைத் தடுக்க அவர்கள் படிக்கும் காலேஜ், வேலை செய்யும் இடங்களிலிருந்து ஃபோட்டோ ஐடென்டியுடன் கடிதம் கொண்டுவந்தால்தான் வீடு வாடகைக்கு என்று தீர்மானமாகச் சொல்லிவிடலாம். இல்லையெனில், இவர்கள் தீவிரவாதிகள்தான் என்று, பிறகு காவல்துறை கண்டுபிடித்துவிட்டால், அவர்களை மட்டுமல்ல... வீட்டுச் சொந்தக்காரரையும், கைது செய்வதுடன், வீட்டையும் சீல் வைத்து விடுவார்கள். பிறகு வீட்டை மீட்க கோர்ட்டில் கேஸ் போட்டு பல வருடங்கள் போராடித்தான் வீட்டைத் திரும்பப் பெற வேண்டும். அதனால் வீட்டை வாடகைக்கு விடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

பலருக்கும் பலகாலமாக ஒரு சந்தேம் உண்டு.

பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து ஒரு வீட்டில் குடியிருந்தால் அந்த வீடு நமக்கு சொந்தமாகிவிடுமா?’ என்பதுதான் அது. இது சாதாரண மக்கள் நடுவில் இருக்கும் ஒரு கருத்து. இதற்கு எப்படி சட்டப்படி விளக்கம் கொடுக்கலாம்?

‘‘ஒருவர் மற்றொருவருக்குச் சொந்தமான இடத்தில், அவருக்குத் தெரிந்தே, வாடகையோ, குத்தகைத் தொகையோ கொடுக்காமல், 12 வருடங்கள் தொடர்ந்து இருந்தால் அந்த இடம் குடியிருப்பவருக்கு சொந்தம்’’ என்கிறது சட்டம். இதை ‘அட்வர்ஸ் பொசஷன்’’ (Adverse Possession)’’ என்பார்கள். நடைமுறையில் இது நடக்கிறதா? ஏமாந்த வாயில்லாப் பூச்சிகளாக இருக்கும், சில நிலச் சொந்தக்காரர்களிடம் இது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மற்றபடி, பன்னிரண்டு வருடம் ஒருவர், ஒரே இடத்தில் தொடர்ந்து இருந்தால், அவருக்கு அந்த இடம் சொந்தமாகி விடாது.
Read more

10 April 2012

உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது?


‘‘அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்ோனார்.

அவருடைய காரியங்கள் முடிந்து, சொத்துகளை யார் பராமரிப்பது என்ற யோசனை வந்தபோது, குடும்ப வக்கீல் ஓர் உயிலைக் கொண்டுவந்து கொடுத்தார். உயிலைப் பிரித்துப் படித்த குடும்பத்தினர் மனநிறைவோடு ராமசாமியை நினைத்துக் கொண்டனர். யாருக்கும் எந்த மனவருத்தமும் இல்லாமல், எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதமாக உயிலை எழுதியிருந்தார்.

தன்னுடைய மறைவுக்குப் பிறகு யாருக்கும் எந்தப் பிரச்னையும் எழக்கூடாது என்று நினைத்த ராமசாமிக்கு, எண்ணத்தை ஈடேற்ற உதவியாக இருந்தது உயில்!

உயில் என்றால் என்ன? ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்). உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.

உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் எழுதிவிடுவது நல்லது. சிவில் கோர்ட்டில் போய்ப் பார்த்தால் எத்தனை வழக்குகள் குடும்பச் சொத்து தொடர்பாக நடந்து கொண் டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு உறவுகளுக்குள் விரிசலை உண்டாக்கி விடும். சொத்துக்களை முறையாகப் பிரித்து உயில் எழுதிவிட்டால் பிரச்னை ஏதுமில்லை.

‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.

உயில் எழுதவேண்டிய அவசியத்தைத் தெரிந்து கொண்டுவிட்டோம். அதை எப்படி எழுதுவது? அதில் உள்ள நுணுக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ள வக்கீலைத்தான் நாடவேண்டுமா?

ரிஷிகேஷ் ராஜாவிடமே கேட்டபோது, ‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.

உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.

உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’ என்றவர், உதாரணமாக ஒரு வடிவத்தைச் சொன்னார்.


‘எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.


உதாரணத்தைச் சொன்ன ரிஷிகேஷ் ராஜா, ‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.

உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.

உயில் அமல்படுத்துநராக ஒருவரை நியமிப்பது அவசியம். உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்களை உயில் அமல்படுத்துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.

உயில் எழுதப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் சிக்கல் ஏற்பட்டு கோர்ட் படியேறுகிறார்களே... மூத்த மகன் தன் பெயரில் ஒரு உயிலைக் காட்டுகிறார், இளைய மகன் தன் பெயரில் ஒரு உயிலைக் காட்டுகிறார். இரண்டுமே ஒரிஜினலாக வேறு இருக்கிறது. அதுபோன்ற சூழலில் என்ன செய்வது?

இதுபற்றி ஒரு வழக்கறிஞரிடம் கேட்டபோது, ‘‘அப்படிப்பட்ட சூழலில் கடைசியாக எழுதப்பட்ட உயில்தான் செல்லுபடியாகும். ஒருவர் தனது வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதலாம். ஆனால், கடைசியாக எழுதப்பட்ட உயில்தான் சட்டப்படி செல்லும்’’ என்றார்.

உயில் இல்லாமல் போனால் தோன்றக்கூடிய நிலை குறித்து வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகி சகுந்தலா சுந்தரம் கூறுகையில், ‘‘உயில் எழுதி வைக்காமல் ஒருவர் இறந்துபோனால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி (அவர் சார்ந்திருக்கும் மதத்துக்கு ஏற்ப) வாரிசுகள் அனைவருக்கும் சொத்து பிரிக்கப்படும். இறந்தவர், தனது வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் கூடுதலாக சொத்தைக் கொடுக்க நினைத்திருந்தாலும், உயில் எழுதாவிட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை. சொத்தை தர்ம காரியங்களுக்குச் செலவு செய்ய விரும்பி இருந்தாலும் அதுவும் நடைபெறாது’’ என்றார்.

தன்னுடைய கணவர் உயில் எழுதி வைக்காததால் தான் படும் சிரமங்கள் குறித்துச் சொன்ன யுவராணி, ‘‘என்னை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்ட என் கணவர், 1999&ல் இறந்து போனார். எனக்கு இரு மகள்கள் உள்ளனர். முதல் மனைவியும் எனது கணவரது குடும்பத்தினரும், சொத்தில் எங்களுக்குச் சேரக்கூடிய பங்கைக் கொடுக்காமல் மாதம் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்து வந்தனர். பிறகு, அந்தப் பணத்தையும் சரியாகக் கொடுக்கவில்லை. வேறுவழியில்லாமல் 2004&ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். என் கணவர் முறையாக உயில் எழுதி, அதில் எங்கள் பங்கைப் பற்றிச் சொல்லியிருந்தால் இத்தனை கஷ்டங்கள் வந்திருக்காது’’ என்றார்.

உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!

சொத்து மட்டும் அல்ல. வீட்டுக் கடன், குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்-கான செலவு போன்ற எதிர்கால பணச்சிக்கல்களைப் பற்றியும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழி-முறைகள் பற்றியும் குடும்பத்தினர் அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

பெரும்பாலான குடும்பத் தலைவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் பொருளாதாரச் செயல் களையும், எதிர்கொள் ளும் பணச்சிக்கல்களையும் தங்கள் குடும்பத்தி னரிடம் முழுமையாகத் தெரிவிப்பதில்லை. உயில் எழுதாமல் இறந்துபோகிற பட்சத்தில், அவரது குடும்பம் எதிர்பாராத சுமைகளைத் தாங்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும். அதைத் தவிர்க்க கண்டிப்பாக உயில் எழுத வேண்டும்.

இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!

நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.

உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது. வங்கி நாமினி, உயில் வாரிசு, என்ன வித்தியாசம்?

வங்கிக் கணக்கில் நாமினியாக ஒருவரைக் குறிப்பிடுவது என்பது கணக்கு வைத்திருப்பவர் இறக்கும்போது, அந்தக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் வழங்குவது என்பதை மட்டுமே குறிக்கும். மேலும், நாமினிக்கு வங்கிப் பணம் வந்தபிறகு, அந்த பணத்தின்மீது இறந்து போனவரின் வாரிசுகளுக்கு உரிமை உண்டு. ஆனால், ‘தான் இறந்த பிறகு, சொத்துகள் யாருக்குச் சேரவேண்டும்’ என்று குறிப்பிட்டு வாரிசை நியமிப்பது உயில். அதன்மூலம் இறந்தவரின் அனைத்து உடமைகளுக்கும் ஒருவர் வாரிசாக நியமிக்கப்பட்டபின், அந்தச் சொத்து வாரிசுக்கு மட்டுமே சொந்தம். எனவே, வங்கி நாமினியை விட, உயில் வாரிசு மிக முக்கியத்துவம் பெறுகிறார்.

உயில்கள் பலவிதம்!

குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.

மிகச் சிறிய உயில்கள்

டெல்லியைச் சேர்ந்த பிமல் ரிஷி, 1995&ல் ‘எல்லாம் மகனுக்கே! (All to son) என்று எழுதியதுதான் மிகச் சிறிய உயில். 1967&ல் செக் நாட்டைச் சேர்ந்த கால் டவுச் எழுதிய உயிலில் ‘எல்லாம் மனைவிக்கே!’ (All to Wife) என்று எழுதியிருந்தார்.

வாரிசு மைனராக இருந்தால்..?

உயிலில் குறிப்பிடப்படும் வாரிசு, 18 வயதுக்கு உட்பட்ட மைனராக இருந்தால், அவருக்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவரே வாரிசின் சொத்துக்குப் பாதுகாவலராகத் திகழ்வார். எதிர்காலத்தில், பாதுகாவலருக்கு இறக்கக்கூடிய நிலை ஏற்படுமாயின், மேலும் ஒரு பாதுகாவலரை நியமிப்பது நல்லது.

உயில் எப்போது செல்லாமல் போகும்?

குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.

சில டெக்னிக்கலான வார்த்தைகள்!
Will - உயில் (விருப்ப ஆவணம்)
Testator - உயில் எழுதியவர்
Executor - உயில் அமல்படுத்துநர்
Codicil - இணைப்புத் தாள்கள்
Attested - சரிபார்க்கப்பட்டது.
Probate - -நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்..
Beneficiary, Legatee - வாரிசு
Intestate - உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate - வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act - இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act - முஸ்லிம் தனிநபர் சட்டம்
Guardian - காப்பாளர்
Witness - சாட்சி



‘காமெடி’ உயில்

கனடா நாட்டு வழக்கறிஞரான சார்லஸ் மில்லர், ‘தான் இறந்து 10 ஆண்டுகளுக்குள், எந்த பெண்மணி அதிக பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாளோ, அவள்தான் தனது மொத்த சொத்துகளுக்கும் வாரிசு’ என்று உயில் எழுதி வைத்தார். சார்லஸின் வாரிசுகள், உயில் போலியானது என்று நிராகரிக்க முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இறுதியில், மொத்த சொத்து, நான்கு பெண்மணிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது!

‘ஆன் லைன்’ உயில்

உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.

புகழ்பெற்றவர்களின் உயில்கள்!

பிரெஞ்சுப் பேரரசரான நெப்போலியன், தனக்கு உதவிய போர் தளபதிகள், போர்வீரர்களுக்கு சொத்தில் ஒரு பங்கைப் பிரித்துக் கொடுத்தார். பாத்திரங்கள், கரண்டிகள், பெட்டிகள், மேஜைகள், ஆடைகள், புத்தகங்கள், போர்வாள்கள், துப்பாக்கிகள் போன்று, தன் வாழ்நாளில் பயன்படுத்திய எல்லா பொருட்களையும் தன் உயிலில் குறிப்பிட்டார்.

மறைந்த தொழில் அதிபர் எம்.பி. பிர்லாவின் மனைவி பிரியம்வதா தன் 5,000 கோடி ரூபாய் சொத்துக்கள் அனைத்தையும் குடும்ப நண்பரும், ஆடிட்டருமான ஆர்.எஸ்.லோதா பெயருக்கு எழுதிவிட்டார்! ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் திருபாய் அம்பானி உயில் எழுதி வைக்காததால் அவருடைய மகன்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் தாயார் கோகிலா பென் அம்பானி தலைமையில், நிதி ஆலோசகர்களின் உதவியுடன், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனங்களைப் பிரித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

உயில் பரிசு!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரெட் நோபல் 1867&ல் டைனமைட் எனும் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார். அதை விற்றதன் மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார். இந்த டைனமைட் வெடிமருந்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 1888&ல் இவர் இறந்தபோனதாக நினைத்து, பிரெஞ்சு பத்திரிகை ஒன்று, இவரது டைனமைட் கண்டுபிடிப்பை மனதில் கொண்டு, ‘மரணத்தின் வியாபாரி’ என்பது போன்ற கடுமையான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்தது. இச்செய்தியைப் படித்த ஆல்பிரெட், தனது கண்டுபிடிப்பால் ஏற்பட்ட கொடுமைகளை எண்ணி மனம் வருந்தினார். ‘தன் வாழ்நாளில் சம்பாதித்த சொத்துகள் முழுவதையும் திரட்டி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், சமூக சேவை அல்லது உலக அமைதி போன்ற துறைகளில் முன்னிலை வகிப்போருக்கு பரிசு வழங்க வேண்டும்’ என்று உயில் எழுதினார். அதுதான் இப்போது பிரபலமாக இருக்கும் நோபல் பரிசு!

சென்னைவாசிகளுக்கு உயில்!

சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களில் வசிப்பவர்கள் உயில் எழுதும்போது முக்கியமான ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். வாரிசுகளுக்குச் சொத்தை சம பங்காகப் பிரிக்காமல், தன் விருப்பப்படி உயில் எழுதியிருந்தால், கோர்ட் அனுமதியுடன்தான் அதைச் செல்லுபடியாக்க முடியும். மற்ற ஊர்களைப் போல உயில் எழுதியவரின் மறைவுக்குப் பிறகு, அந்த உயிலில் சொன்னபடி சொத்தை வாரிசுகள் பிரித்துக்கொள்ள முடியாது.

இதுபற்றி சென்னையைச் சேர்ந்த அட்வகேட் கண்ணனிடம் கேட்டபோது, ‘‘சென்னைக்கு வெளியே எங்கு சொத்துக்கள் இருந்தாலும் சென்னை விலாசத்தைக் குறிப்பிட்டு உயில் எழுதிவிட்டால், அதை கோர்ட்டில் தாக்கல் செய்தால்தான் செல்லுபடியாகும். இதை புரொபேட் (Probate) என்பார்கள். சென்னை ஹைகோர்ட்டில் உயிலில் சொல்லப்பட்டிருக்கும் சொத்தின் மதிப்பில் 3% கட்டணமாகச் செலுத்தி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

உயிலில் சாட்சியாகக் கையெழுத்துப் போட்டவர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது கோர்ட்டுக்கு வந்து, ‘இந்த உயில் என் முன்னிலையில் நேர்மையாக, நாணயமாக யாருடைய தூண்டுதலும் இல்லாமல் சொந்த விருப்பத்தின்படி எழுதப்பட்டதுதான்’ என்று சொல்ல வேண்டும். கூடவே, ஒரிஜினல் உயில், அதை எழுதியவரின் இறப்புச் சான்றிதழ், சொத்துகளுக்கான ஆதாரங்கள் போன்றவற்றை இணைத்துக் கொடுக்கவேண்டும். அதோடு சமமாகப் பிரிக்கப்படாததால், யாருக்காவது எதிர்ப்பு இருந்தால் அவர்களை எதிர்தரப்பாக மனுவில் சேர்க்க வேண்டும்.

கோர்ட் விசாரணைக்குப் பிறகு, சொத்தின் மதிப்பு பற்றிய தகவலுக்காக கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் அவர்கள் சரி பார்ப்பார்கள். அதன்பிறகு, உரிய கட்டணத்தைச் செலுத்தி உயிலைச் செல்லுபடியாக்கிக் கொள்ள முடியும்’’ என்றார்.

சென்னையிலேயே வாழ்ந்தாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இந்த புரொபேட் தேவையில்லை என்பது கண்ணன் சொன்ன கூடுதல் தகவல்
Read more

05 April 2012

வாடகைக்கு குடியிருப்போருக்கு சாதகமான சட்டங்கள்


ப்ரீதாவும், ஹரியும் ஒரு வழியாக குடியிருக்க ஒரு ஃபிளாட்டை முடிவு செய்து விட்டார் கள். வாடகையும் அவர்கள் பட்ஜெட்டிற்குள் இருந்ததால் சட்டென்று ஓ.கே. பண்ணி விட் டார்கள். ஹரி மார்க்கெட் நிலவரப்படி 10 சத வீதம் அட்வான்ஸ் கொடுக்கும் போது, ஃப்ளாட் ஓனர் ஓர் அக்ரிமெண்டடைக் கொடுத்து அவனிடம் கையெழுத்துப் போடச் சொன்னார். அதன் மேல் லேசாக கண்களை ஓட்டியபடி கையெழுத்துப் போட்டான் ஹரி. அக்ரி மெண்டை சற்று உன்னிப்பாக கவனித்த ப்ரீதா.

‘‘பதினோரு மாசம்தான் அக்ரிமெண்ட்ல எழுதி இருக்கீங்க. நாங்க குறைஞ்சது 3 வருஷமாவது இருப்போம். அக்ரி மெண்ட்டுல 3 வருஷம்னு போட்டுக் குடுங்க’’ என்றாள்.

‘‘பொதுவாக பதினோரு மாச அக்ரீமெண்ட்தான் எல்லாருமே போடுவாங்க. பதினோரு மாசத்துக்கப்புறம் மறுபடியும் இன்னொரு அக்ரிமெண்ட் போட்டுக்கலாம்’’ என்றார் வீட்டு ஓனர். ஆனால், ஏன் பதினோரு மாதம் மட்டும் அக்ரிமெண்ட் போட வேண்டும் என்ற ப்ரீதாவின் கேள்விக்கு, அவரால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.

ப்ரீதாவைப் போலத்தான் பலருக்கும் ஏன் இந்த ‘பதினோரு மாத அக்ரிமெண்ட் என்ற கேள்வி எழும். இதற்கு ஏதாவது முக்கியமான காரணம் இருக்கிறதா என்று பார்த்தால், சட்டப்படி ஸ்டராங்கான காரணம் உண்டு. அதாவது, வாடகையெல்லாமே ‘குத்தகை ’ என்றுதான் கருதப்படும். இந்தக் குத்தகை பதினோரு மாதங்களுக்கு மேற்பட்டால் கண்டிப்பாக ரிஜிஸ்டர் ஆஃபீஸில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் வாடகைக்கு விடும்போது. ரிஜிஸ்திரேஷன் செய்வதென்பது சாத்தியமில்லை. அதோடு இதில் நிர்வாக சிக்கல்களும் அதிகம். அதனால்தான் வாடகைக்கான அக்ரிமெண்ட் பதினோரு மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது.

‘வீட்டு வாடகை’யைப் பற்றிப் பேசும்போது நம் நினைவில் ஒரு காட்சி கண்டிப்பாக வந்து போகும். கார்ப்பரேஷன், முனிசிபாலிடி போன்ற அலுவலகங்களிலிருந்து வருடத்திற்கு ஒரு முறை ஒரு அதிகாரி வந்து, குடியிருப்பவர்களிடம், ‘வாடகை எவ்வளவு’ என்று விசாரிப்பார். குடியிருப்பவர்களும் தயக்கமே இல்லாமல் மிகக் குறைந்த தொகை ஒன்றை (உதாரணமாக 700 சதுர அடியுள்ள ஒரு வீட்டிற்கு, சென்னையில் ரூ. 1,000) சொல்லுவார்கள். விசாரித்த அதிகாரிக்குத் தெரியாதா? இவ்வளவு குறைந்த வாடகையில் குடியிருக்க முடியாது என்று. இருந்தாலும் குடியிருப்பவர்களே குறைத்துச் சொல்வதால் அவர் பேசாமல், சொன்ன வாடகையை எழுதிக் கொள்வார். பல காலங்களாக ‘வாடகை’ என்பது வீட்டு ஓனர் நிர்ணயிருப்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், அரசு நிர்ணயித்திருக்கும் வாடகை எவ்வளவு தெரியுமா? அந்த வீட்டின் மதிப்பில் 9 சதவீதம் மட்டும்தான் ஓர் ஆண்டிற்கான வாடகையே இதுவே வியாபாரத்திற்காக விடப்பட்டால் 12 சதவிகிதம்தான்.

சரியாகச் சொல்வதென்றால், ஒரு வீட்டின் விலை ரூ. 12 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வீட்டிற்கு வருட வாடகை 9 சதவீதமாகக் கணக்கிட்டால் ரூ. 10,800/_ தான். அதாவது ஒரு மாதத்திற்கு ரூ. 900/_ மட்டும்தான். இதைத்தவிர வீட்டின் வயதைப் பொறுத்து வருடத்திற்கு 1 சதவீதம் பில்டிங் மதிப்பில் தேய்மானமும் கணக்கிடப்படும்.

இவையெல்லாம் கணக்கிட்டால், நாம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கான வாடகையைத்தான், ஒரு மாதத்திற்குக் கொடுத்துச் கொண்டிருக்கிறோம். இன்னொரு முக்கியமான விஷயம்... அட்வான்ஸ்கூட சட்டப்படி ஒரு மாதத்திற்கு மேல் வாங்கக்கூடாது. மேலும், அடிப்படைத் தேவைகளான. தண்ணீர், மின்சாரம், டிரெயினேஜ் போன்றவைகளை வீட்டு ஓனர்கள் கண்டிப்பாக குடியிருப்பவர்களுக்கு செய்துதர வேண்டும்.

குடியிருப்போரின் விருப்பத்திற்காக, அந்த வீட்டில் சௌகரியங்கள் செய்யப்பட்டால் மட்டுமே வாடகையை ஏற்றலாம்.

இவையெல்லாம் குடியிருப்போருக்கு சாதகமான சட்டங்கள். ஆனால் சில கில்லாடி ஆசாமிகள், குடியிருக்க வீடு வேண்டும் என்று சொன்ன வாடகைக்கு வந்து விட்டு, அதை வியாபாரத்திற்காகப் பயன்படுத்துவதும், சிலர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்காக வீட்டைப் பயன்படுத்துவதும் உண்டு. அதனால் ஓனர்களுக்கு பாதுகாப்பான சட்டங்களைப் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner