Ads Header

Pages


Showing posts with label நீர் கடுப்பு. Show all posts
Showing posts with label நீர் கடுப்பு. Show all posts

12 August 2013

நீர்கடுப்பு நீங்க...

நீர்கடுப்பு வராமல் தடுக்க

இளநீரைச் சீவி எடுத்து அதற்குள் சீரகம் 1 ஸ்பூன், சிறிதளவு சர்க்கரை, பாசிப்பயறு 10 கிராம் போட்டு ஓர் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் எடுத்து அவற்றை அரைத்து இளநீரில் கரைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு மூன்று நாட்களுக்கு ஆறுவேளை என அருந்தி வந்தால் நீர்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். சருமம் பொலிவு பெறும். கண்பார்வை தெளிவடையும்.

நீர் எரிச்சல் தீர நன்கு தண்ணீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சம் பழச்சாறு எடுத்து அதில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து அருந்துவது நல்லது.

பானகம் செய்து அருந்தலாம். அதாவது பனை வெல்லத்துடன் புளிக்கரைசலைச் சேர்த்து கரைத்து பானகமாக அருந்தலாம்.

சிறிதளவு வால்மிளகை பாலில் ஊறவைத்து அரைத்து அந்த பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் நீர்ச்சுருக்கு நீர்த்தாரை புண் போன்றவை நீங்கும்.

மண்பானையில் நீர் ஊற்றி அதில் விலாமிச்சம் அல்லது வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு நீர் எரிச்சல் நீங்கும். உடல் சூடு தணியும்.

முதல்நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த உளுந்து ஊறிய நீரை மட்டும் பருகி வந்தால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு நீங்கும்.

பசலைக்கீரை நீர்க்கடுப்பைப் போக்கும் தன்மை கொண்டது. எனவே வாரம் இருமுறை பசலைக் கீரையை உண்டு வருவது நல்லது.

சீரகம், சோம்பு, வெந்தயம், சின்னவெங்காயம், கொத்தமல்லி விதை இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தயிர் அல்லது மோரில் கலந்து அருந்தி வந்தால் நீர்கடுப்பு உடனே நீங்கும்.

பூசணிக்காயை சாறு எடுத்து அதில் செம்பருத்திப் பூவை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் சொட்டு சொட்டாக சிறுநீர் கழிதல் குணமாகும்.
Read more

07 November 2012

நீர்ச்சுருக்கு குணமாக...

நீர்ச்சுருக்கு குணமாக...

ஒரு சிலருக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்து விட்டால்
சிறுநீர் கழிக்கும் பொழுது நீர்த்தாரையில் சுருக்கு வலி
உண்டாகும் கடுக்கும்.

இந்த நிலை ஏற்பட்டால் நன்றாக
பழுத்த மாதுளம் பழத்தின் சிவந்த முத்துக்களில் ஒரு
கைப்பிடி அளவு எடுத்து அதை வாயில் போட்டு நன்றாக
மென்று தின்ன வேண்டும்.
மாதுளம் பழத்தின் விதையை
கீழே துப்பி விட கூடாது விதைகளை நன்றாக மென்று
மாவாகச் செய்து விழுங்க வேண்டும்.

மாதுளம் பழவிதைகளை மெல்ல மெல்ல அது பாதாம் பருப்பின்
சுவை வரும் அதான் இதை சுலமாக நாம் சாப்பிடலாம்.

இது போலவே தொடர்ந்து காலை,மாலை என முன்று
நாள் சாப்பிட்டால் நீர் கடுப்பு குணமாகிவிடும் தினமும்
சாப்பிட வேண்டும் அப்போதுதான் சரியாகும்.
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner