தினசரி புதுப்புது அழகு
சாதனங்களின் விளம்பரத்தை நாம் பார்க்கிறோம். எது உங்கள் சருமத்துக்கு
தீங்கு விளைவிக்காதது, எதை வாங்கினால் நீங்கள் விரும்பும் பயன் கிடைக்கும்
என்ற கேள்விகளுக்கு பதில், நீங்கள் அந்தப் பொருட்களை வாங்கி பயன்
படுத்திய பிறகுதான் கிடைக்கும்!. ஆனால் எந்த விதமான பக்க விளைவுகளும்
இல்லாமல் நம் அழகுக்கு அழகு சேர்க்க, இயற்கை பல அழகு சாதனங்களை நமக்கு
வழங்கியுள்ளது. இவற்றை தேடி நாம் வெகு தூரம் செல்ல வேண்டாம். உங்கள்
சமையல் அறையிலேயே கிடைக்கும் பொருட்கள்தான் இவை.
1. வெள்ளரிப் பிஞ்சு:
இதன் சாற்றை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சற்று சூடான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும்.
2. எலுமிச்சம் பழம் :
எலுமிச்சம் பழச் சாற்றை
தேனுடன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தை வெண்மையாக்கும். ப்ளீச் செய்து
கொள்வதற்கு பதிலாக இதை உபயோகித்துப் பாருங்கள்.
எலுமிச்சம் பழச் சாற்றுடன்
முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தடவினால், முகத்தில்
சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உலர்ந்த சருமம் உள்ளவர்கள்
கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கவும்.
3. மோர் :
இது குடிப்பதற்கு மட்டுமல்ல,
குளிப்பதற்கு முன்பு முகத்திலும் உடம்பிலும் தடவி பிறகு குளித்தால்,
உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
4.வெந்தயம் :
சீயக்காய் அரைக்கும்போது
வெந்தயம் போட்டு அரைப்பது வழக்கம். ஷாம்பு உபயோகிக்கும் இந்த காலத்தில்,
இதைத் தண்ணீரில் ஊர வைத்து குளிப்பதற்கு முன் முடியில் தடவினால் முடி
பளபளப்பாக இருக்கும்.
5.விளக்கெண்ணெய் :
கை, கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
இதை புருவத்திலும், கண் இமையில் உள்ள முடியிலும் தினமும் படுப்பதற்கு முன் தடவி வந்தால் அது அடர்த்தியாகும்.
6. பருப்பு :
கடலை மாவையும் பயத்தம் பருப்பு மாவையும் கலந்து சோப்புக்கு பதிலாக உபயோகித்து வந்தால், உங்கள் சருமம் உலர்வதை தவிர்க்கலாம்.
7. தேங்காய் எண்ணெய் :
இதை முடியில் தடவுவது
பல்லாண்டு காலமாக தொடர்ந்து வரும் பழக்கம். இதை வாரம் ஒருமுறை உடலில்
நன்றாகத் தேய்த்து, அதன் பின் குளித்தால் பட்டுப் போன்ற மென்மை தரும்.
8. பூசு மஞ்சள் தூள் :
இதை, தொடர்ந்து முகத்தில்
பூசி குளித்தால் முகத்தில் முடி வளர்வதை தடுக்கலாம். ஆனால் மஞ்சள்
தேய்த்து குளித்தவுடன் வெய்யிலில் செல்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால்
இதனால் சருமம் கருமை அடையும்.
முதலில் பழங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்:
ஆப்பிள்: இதை குளிர்சாதன பெட்டியில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.
வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
திராட்சை இதனை பிரிட்ஜில் கழுவாமல் வைத்திருந்து 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்,
ஆரஞ்சு, கமலா, கிரேப் ஃ புரூட், இதனை 2 வாரங்கள் பிரிட்ஜில் வைக்கலாம்
பைனாப்பிள் - நன்கு பழுத்த பிறகு பிரிட்ஜில் 3 - 5 நாட்கள்
தர்பூசணி துண்டு - பிரிட்ஜில் 6 - 8 நாட்கள் வைக்கலாம்
எலுமிச்சை- இரண்டு வாரம் வைக்கலாம்
பெர்ரி பழ வகைகள்- பிளாஸ்டிக் பையில் போட்டு 2-3 நாட்கள் வைக்கலாம்.
பேரிக்காய்,
சப்போட்டா, கொய்யா போன்றவைகள் - பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து பிறகு
பிரிட்ஜில் 3 -5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
காய்கறிகள்:
பீன்ஸ்- இதை நன்கு கழுவி, பிரிட்ஜில் வைத்திருந்து 3 - 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும்.
கத்தரிகாய்- இதை வெளியிலும் வைக்கலாம், பிரிட்ஜில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 -4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
தக்காளி- வெளியில், பிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம் ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
கேரட்- நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
பீட்ருட்- இரண்டு வாரம் வைத்திருக்கலாம். காலிபிளவர்,
முள்ளங்கி-- இரண்டு வாரம் பிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
வெண்டைக்காய்- 5 - 7 நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்
உருளைக்கிழங்கு- வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம்
வெங்காயம்- வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம்
குடமிளகாய்- நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம்.
கீரைவகைகள்- பிளாஸ்டிக் பையில் 3 - 5 நாட்கள் வைக்கலாம்.
முட்டகோஸ், செல்லரி,- பிளாஸ்டிக் பையில் 2 வாரங்கள் வைக்கலாம்.
புரோக்லி, மஷ்ரும் - அதிகபட்சம் 2 -3 நாட்கள் வைக்கலாம்.
பூசனிக்காய், வெள்ளரிக்காய் - ஒரு வாரம் வைக்கலாம்.
அசைவ வகைகள்:
முட்டை- பிரிட்ஜில் 3 -5 வாரங்கள் வைக்கலாம் அல்லது காலாவதியாகும் நாட்களுக்குள் பயப்னடுத்துவது நல்லது.
வேக வைத்த முட்டை- பிரிட்ஜில் 5 -6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
முட்டை வெள்ளைகரு- பிரிட்ஜில் 2 -3- நாட்களுக்குள்
முட்டையின் மஞ்சட் கரு- 2 -4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
பிரஷ் சிக்கன், தோல் நீக்காதது - 1 - 2 நாட்கள் வைத்திருக்கலாம்.
பிரஷ் மட்டன், பீஃப் - 1 -3 நாட்கள் வைக்கலாம். மீன்- 1 - 2 நாட்கள் வைக்கலாம்.
மீன் க்பிள்ளட்ஸ்/ துண்டுகள்- நான்கு நாட்கள் வைக்கலாம்.
எறா, நண்டு - பிரிட்ஜில் இரண்டு நாட்கள் வைக்கலாம்.
சமைத்த இறைச்சி- நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஃ பிரீசரில் வைப்பதானால் நான்கு மாதங்கள் வரை வைக்கலாம்.
மற்றபடி
பால். தயிர், வெண்ணெய் போன்ற டெயிரி/dairy பொருட்களை அவைகள் காலாவதியாகும்
நாட்களை கவனித்து வாங்கி அதற்குள் பயன்படுத்திடுவது நல்லது. மேலும் அவைகளை
நமது குடும்பத்தின் தேவைக்கேற்ற அளவில் வாங்குவது பண விரயத்தையும்
தடுக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக, எப்போதும் ஃபிரஷாக உண்ண வேண்டுமானால்
1.முதலில், அவைகளை தரமான பொருளாக பார்த்து வாங்க வேண்டும்.
2.வாங்கியதை, அந்தந்த இடத்தில் பதப்படுத்திவிட வேண்டும்.
3.திட்டமிட்டு, பொருட்களை உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும். நன்றி.