Ads Header

Pages


15 October 2012

இ‌ஞ்‌சி செ‌ரிமான‌த்‌தி‌ற்கு மரு‌ந்தாகு‌ம்.

ய‌ற்கை வைத்தியம்
செ‌ரிமான‌த்‌தி‌ற்கு மரு‌ந்தாகு‌ம் இ‌ஞ்‌சி


இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை, கிராம்பு - இவற்றை சூரணமாக்கி துளசிச்சாறு விட்டு அரைத்து, அதை மிளகளவு மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இதை இருவேளை உட்கொண்டு வர செரியாமையை நீக்கி நல்ல பசியை உண்டாக்கும். சிறிதளவு இஞ்சியை தட்டி வெயிலில் காய வைத்து, அதை வெந்நீரில் போட்டு அரை மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள் நீங்கும். 10 கிராம் அளவு இஞ்சியுடன் 6 மிளகு, 3 வெள்ளெருக்கம் பூ இவற்றை சிதைத்து சேர்த்து, பின் நீர்ல் இட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்துவர ஆஸ்துமா, இருமல்,சளி குணமாகும். இஞ்சியை இடித்து சாறு பிழிந்து அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து தடவி வர பருக்கள் குணமாகும். இஞ்சிச் சாற்றுடன் வெங்காய சாறும், தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner