28 October 2013
தேமல் மறைய...
தேள், பாம்புக் கடிக்கு உடனடி நிவாரணம்
தேள், பாம்புக் கடிக்கு உடனடி நிவாரணம்
பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும்
வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள்,
குட்டம் குணமாகும். பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ
கடுப்பு நீங்கும். பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக்
கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும். பிரமத்
தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு,
உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும். பிரம தண்டு
பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய்
குணமாகும்.
27 October 2013
வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்
காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து
அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று
விழுங்கிவர வேண்டும்
நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய
சாப்பிடவேண்டும்.
பத்தியம் ஏதேனும் உண்டா?
வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ
கூடாது.
அல்சர் நோய் குணமாக....
அல்சர் நோய் குணமாக
கற்பூர வாழைக்காயை தோல்சீவாமல் வெட்டி காயவைத்து பொடிசெய்து கொள்ளவும். இது 500 கிராம்,பனங்கற்கண்டு 2 5 கிராம் ஏலக்காய் பொடி 10 கிராம் சேர்த்து அரை ஸ்பூன் வீதம் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் குணமாகி விடும்.பொடுகு நீங்க என்ன செய்யலாம்?
துளசி பொடி, வேப்பிலை பொடி இரண்டையும் சுடு நீரில் குழைத்து, தலையில்
தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். நாளடைவில் பொடுகு மறைந்து
விடும்.

